நாகர்கோவில், மார்ச் 8- கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெய்த வட கிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட கால்வாய், சாலை கள் உள்ளிட்டவை சீரமைக்கப் பட்டதை திங்களன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நாகர்கோவில் மாநக ராட்சி பகுதியில் 26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட பணிகள், பேயங்குழி இரட்டைக் கரை கால்வாயிலிருந்து தண்ணீர் ஏற்றுவதற்காக 60 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ராட்சத இரும்பு குழாய்கள் அமைக்கப் பட்ட பணிகள், குமாரகோவில் - பத்மநாபபுரம் புத்தனார் கால்வாய் அணைக்கட்டு பகுதி யில் உடைப்பு ஏற்பட்ட இடங்க ளில் 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்புப் பணிகள் ஆகிய வற்றை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நாகர்கோவில் மாநகராட்சி க்குட்பட்ட பகுதிகளில் வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைப்பதற்காக குடிநீர் அபி விருத்தி திட்டம் மற்றும் பாதாள சாக்கடைத் திட்டத்தின் கீழ் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற் கொள்ளப்பட்ட 12.59 கி.மீ. நீளத்திற்கான 19 சாலைப் பணி கள், மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட 40 சாலைப் பணிகள் மற்றும் 25 சிப்பங்கள் மூலம் சாலை அமைக்கும் பணிகள் ஆகிய வற்றை பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து, பேயங்குழி, இரட்டைக்கரை கால்வாயில் உடைப்பு ஏற்பட்ட தன் காரணமாக குளங்களில் நீர் அளவு மிகவும் குறைந்து, விவ சாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்த நிலை யில், தமிழ்நாடு மாநில பேரிடர் நிதியிலிருந்து 60 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 3 ராட்சத இரும்பு குழாய்கள் வழியாக தண்ணீர் கொண்டு செல்வதற் கான பணிகள் போர்க்கால அடிப் படையில் மேற்கொள்ளப்பட்டு, பணிகள் முடிவடைந்து பொது மக்கள் மற்றும் விவசாயிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப் பட்டதை முதலமைச்சர் பார்வை யிட்டு, ஆய்வு செய்தார். பின்னர், குமாரகோவில் - பத்ம நாபபுரம் புத்தனார் கால்வாய் அணைக்கட்டு பகுதியில் உடைப்பு ஏற்பட்டுள்ள பகுதிக ளில் 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டு பொதுமக்கள் மற்றும் விவசாயி கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டதை பார்வையிட்டு, ஆய்வு செய்தார். இந்நிகழ்வின்போது, வரு வாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்தி ரன், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், நாடாளு மன்ற உறுப்பினர் விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெ.ஜி.பிரின்ஸ், எஸ். ராஜேஷ் குமார், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சி யர் மா. அரவிந்த், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், உள்ளாட்சி அமைப்பு களின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.