சிவகங்கை, நவ.2. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டத்திற்குட்பட்ட கழனிவாசல் பகுதியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் சிறு விளை யாட்டு அரங்கம் அமைப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டா லின் காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். கழனிவாசல் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில், கூட்டு றவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், காரைக்குடி சட்டமன்ற உறுப்பி னர் மாங்குடி, தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை, மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ்கண் ணன், சங்கராபுரம் ஊராட்சி மன்றத்தலைவர் தேவி மாங்குடி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராதா பாலசுப்பிர மணியன், ஒன்றிய குழு உறுப்பினர் சொக்கலிங்கம், காரைக்குடி நகர்மன்ற துணைத்தலைவர் குணசேகரன், காரைக்குடி வட்டாட்சியர் தங்கமணி, மாவட்ட கால்பந்து விளையாட்டு கழக தலைவர் ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.