districts

img

பள்ளி மாணவர்களுக்கு செஸ் போட்டி

இராமநாதபுரம்,ஜூலை 21- 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இந்தியாவில் முதல் முறையாக ஜுலை 28 ம் தேதி தமிழ்நாட்டில் மாமல்லபுரத்தில் பிரதமர் மற்றும் தமிழக முதல்வர் ஆகி யோரால் துவக்கி வைக்கப்படுகிறது.  இதைத்தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஜூலை 21 வியாழனன்று திருவாடானை வட்டம்  சி.கே.மங்களத்தில் உள்ள புனித பிரான்சிஸ் மேல்நிலைப்  பள்ளியில் மாணவர்களுக்கு செஸ் போட்டிகள் பள்ளி யின் தலைமையாசிரியர் அருட்சகோதரி லீமா புஷ்பா  தலைமையில் நடைபெற்றது. திருவாடானை வட்டாட்சி யர் ஆர்.செந்தில்வேல் முருகன் போட்டியை துவக்கி வைத்து பார்வையிட்டார். பள்ளியின் உடற்கல்வி ஆசிரி யர் லாரன்ஸ் பிரசாத், தேர்தல் துணை வட்டாட்சியர் கருப்பையா, வருவாய் ஆய்வாளர்கள் மெய்யப்பன், செந்தில்குமார், கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக், கிராம உதவியாளர்கள் கார்த்திக், தர்மராஜ் ஆகியோர் போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்தினர்.