districts

img

அருமனையில் இன்று தோழர்கள் பாபு - செல்லையன் நினைவு தினம்

அருமனை, மே. 9- கன்னியாகுமரி மாவட் டத்தில் 1984 ஆம் ஆண்டு மே 10-ஆம் தேதி மத வெறி யர்களால் படுகொலை செய் யப்பட்டனர். தோழர்கள் பாபு, செல்லையன். குமரி மாவட்டத்தில் மலையோர மக்களை ஒன்று திரட்டி அநீதிக்கு எதிராக வும் ஏழை எளிய மக்களுக்கா கவும் தாழ்த்தப்பட்ட மக்க ளின் உரிமைக்காகவும் இயக்கங்கள் நடத்தி பல்வேறு தியாகங்கள் செய்து கம்யூனிஸ்ட் கட்சி வளர்ந்து வரும் கால கட்டத்தில் 19 84 மே மாதம் ஒன்றாம் தேதி பாட்டாளி மக்களின் உழைப்பாளி வர்க்கத்தின் மே தினத்தை கொண்டாடி நாடு முழுவ தும் புது கொடிகள் ஏற்றி மகிழ்ச்சி அடைந்து வரும் காலகட்டத்தில் அருமனை யில் மே தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் மக்கள் எழுச்சியுடன் நடைபெற்றது. சுற்று வட்டார பகுதிகளி லும் கொடிகள் ஏற்றி கொண்டாடப்பட்டது .இதை பொறுத்துக் கொள்ள முடியா மல் மத வெ றி பிடித்த கூட்டம் கோரத்தாண்டவம் ஆடத் தொடங்கியது. ஆங்காங்கே கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொடிகளை அறுப்பதும் எரிப்பதும் தொடர்ச்சியாக நடந்து வந்தது.  இந்நிலையில் கம்யூ னிஸ்ட் இயக்கத்தை சார்ந்த வர்களையும் தீர்த்து கட்டு வது என திட்டம் போட்டு தெற்றிவிளை ஏழை விவ சாய தொழிலாளி  தலித் குடும்பத்தை சேர்ந்த தோழர் செல்லையன் அதே போன்று கம்யூனிஸ்ட் கட்சியோடு தோள் கொடுத்து தோளாக நின்ற நெடியசாலை தோழர் பாபு   ஆகியோர் ஆர் எஸ் எஸ்சி ன் வெறியாட்டத்திற்கு மழுவன்சேரியில் பலியா னார்கள் .இச்செய்தி காட்டுத்  தீ போல் அருமனை சுற்றுவட்டார பகுதியில் பரவியது.  இதையடுத்து ஆர்எஸ்எஸ் -சை சேர்ந்த வர்களுக்கு ஒளிவதற்கு இட மில்லாமல் ஓடிவிட்டார்கள். பதட்டம் நீடித்தது. போலீஸ் குவிக்கப்பட்டது அப்பகுதி யில் பல மாதங்களுக்குப் பிறகு அமைதி நிலவியது. தொடர்ந்து மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சிமக்களு டன் இணைந்து சமாதான மாக யோசித்து பல்வேறு கட்ட முயற்சிகளை மேற் கொண்டதின் விளைவாக அமைதி நிலவியது.அதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ,வாலி பர் சங்கமும் மக்களை திரட்டி மக்கள் ஒற்றுமை இயக் கத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது.