districts

img

விக்ரம் லேண்டரின் புகைப்படத்தை வெளியிட்ட “சந்திரயான்-2” ஆர்பிட்டர்

நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய இஸ்ரோவின் “சந்திர யான் - 3” விண்கலம் கடந்த ஜூலை 14  அன்று விண்ணில் ஏவப்பட்டது. “சந்திர யான் - 3” விண்கலத்தில் இருந்து பிரிந்த  “விக்ரம்” லேண்டர் ஆகஸ்ட் 23 அன்று  நிலவின் தென் துருவத்தில் வெற்றிகர மாக தரையிறங்கிய நிலையில், விக்ரம் லேண்டரில் இருந்து வெளிவந்த பிரக்  யான் ரோவர் 14 நாட்கள் ஆராய்ச்சி பணி களை மேற்கொண்டது. தற்போது ரோவர் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டு பாது காப்பாக உறக்கத்தில் (ஸ்லீப்பர் மோடில்) நிறுத்தப்பட்டுள்ளது.  “சாஸ்டே (ChaSTE), ரம்பா - எல்பி  (RAMBHA-LP), இல்சா (ILSA) கருவிகள்  மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகள் பூமியில்  பெறப்பட்ட நிலையில், ரோவரை தொட ர்ந்து விக்ரம் லேண்டரும் உறக்கநிலை யில் வைக்கப்பட்டுள்ளது. லேண்டரும், ரோவரும் செப்டம்பர் 22 அன்று மீண்டும் செயல்பட தொடங்கும்” என்று இஸ்ரோ  தெரிவித்துள்ளது. மேலும், “சந்திரயான் - 2” ஆர்பிட்டரின்  ரேடார் எடுத்த “சந்திரயான் - 3” இன் விக்  ரம் லேண்டரின் புகைப்படத்தை வெளி யிட்டுள்ளது இஸ்ரோ. கடந்த செப்டம்பர் 6 அன்று “சந்திரயான் - 2” ஆர்பிட்டரில் உள்ள இரட்டை அதிர்வெண் செயற்கை  துளை ரேடார் (DFSAR) கருவி, “சந்திர யான் - 3” லேண்டரை புகைப்படம் எடுத்த தாகவும் தெரிவித்துள்ளது.