districts

img

பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தவர் முதல்வர்

சிவகங்கை, ஜன.25- சிவகங்கை மாவட் டம், சிறுகுடி ஊராட்சி மன்ற தலைவி பஞ்ச வர்ணம் கூறுகையில், பெண்கள் கட்டணமின்றி பேருந்துகளில் பயணம் செய்யலாம் என்ற அரசின் அறிவிப்பு  பெண்களுக்கு பயனை தந்துள் ளது. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு கைம்பெண் மறுமண உதவித் திட்டம், ‘ஆதர வற்ற கைம்பெண் உதவித் தொகை திட்டம்’ போன்றவை பெண்களின் வாழ்க்கை யில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த உரு வாக்கப்பட்டன. மாற்றுத் திறனாளி ஏழைப் பெண்களுக்கு ‘சத்யவாணி முத்து அம்மை யார் நினைவு இலவசத் தையல் இயந்தி ரம் வழங்கும் திட்டம்’, பெரியார் ஈ.வெ.ரா. நாகம்மை இலவசக் கல்வித் திட்டம், ஆத ரவற்ற முதிர்கன்னி உதவித் திட்டம், சாதி மறுப்புத் திருமணங்களை ஊக்குவிக்கும் ‘அஞ்சுகம் அம்மையார் கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம்’, மகளிர் சுயஉதவிக் குழு, சொத்தில் சம உரிமை உள்ளிட்ட பல் வேறு திட்டங்களை முதல்வர் கொண்டுவந் துள்ளார் என்று தெரிவித்தார்.