districts

img

மயானம் - குடிநீர் வசதி இல்லை - 3 கி.மீ.தொலைவில் ரேசன்கடை அடிப்படை வசதியின்றி அவதிப்படும் அந்தனேரி பழங்குடி மக்கள்

மதுரை, ஜூன் 19-  மதுரை மாவட்டம் அந்தனேரி, சம்பக்  குளம் பகுதிகளில் அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் பெரும் அவதிப்படுகின்றனர். அரசும் மாவட்ட மற்றும் மாநகராட்சி விரைந்து செய்து தர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டம் கடச்சனேந்தல் அருகே உள்ளது அந்தனேரி கிராமம். இங்கு 1962  ஆம் ஆண்டு முதல் காட்டுநாயக்கர் இனத்  தைச் சார்ந்த பழங்குடியின மக்கள் வாழ்ந்து  வருகின்றனர். இவர்கள் பிழைப்பிற்காக பிற ஊர்க ளுக்குச் சென்று குறிசொல்லி, அதில் வரும் வருமானத்தை வைத்தே வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். பிழைப்புக்காக செல்லும் இவர்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறைதான் தங்களது குடும்பத்தை சந்திக்க வருகிறார்கள். திருவிழா சமயங்களில் ஒன்  றாக கூடுகின்றனர். இந்த மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம் ஆகிய அமைப்புகளில் இணைந்து கொண்டு சமூக சிந்தனையோடு இயக்கங்க ளில் பங்கெடுத்து வருகிறார்கள். அந்தநேரி மக்கள் ஜூன் 12 அன்று கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜய ராஜன், மாவட்டச் செயலாளர் மா. கணே சன், பகுதிக்குழு செயலாளர் ஏ. பாலு ஆகி யோரை சந்தித்தபோது மனவேதனையோடு இப்பகுதி அவலங்களை முன்வைத்தார்கள்.  அவர்கள் கூறுகையில், நாங்கள் இப்பகுதி யில் மூன்று தலைமுறையாக நிரந்தரமாக வாழ்ந்து வருகிறோம். ஆனால் நிரந்தரமான மயானம் இல்லை என்று தெரிவித்தனர். 

கண்மாய்கரையே மயானமாக...
இப்பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் தாம ரைச்செல்வன் கூறுகையில்,  இப்பகுதிக்கு நிரந்தரமான மயானம் கிடையாது. எங் கள் பகுதியில் ஒருவர் இறந் தால் அவரது உடலை கடச்ச னேந்தல் கண்மாய் கரையில்தான் அடக்கம் செய்யவேண்டிய நிலை உள்ளது. இது ஆபத் தானது. கண்மாய் கரை பகுதியில் பலரும் நடந்து செல்வார்கள். மழைக்காலங்களில் மண் சரிவு ஏற்படும். கண்மாயில் தண்ணீர் அதிகமானால் பெரும் சிரமங்கள் ஏற்படும். இதுபோன்ற சூழ்நிலைகளில்தான் நாங்கள் கரையில் உடல்களை அடக்கம் செய்கின் றோம். உடலை அடக்கம் செய்வதற்கு போதிய இடம் கூட கிடையாது. அடக்கம்  செய்யப்பட்ட இடத்திலேயே தான் மற்றொரு வர் உடலை அடக்கம் செய்யக்கூடிய சூழ்  நிலை உள்ளது. எனவேதான் அரசு எங்கள்  பகுதிக்கு நிரந்தரமான மயானம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.  இசக்கி என்பவர் கூறுகையில், 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் பகுதியில் நிரந்தரமாக ரேசன் கடை இல்லாத நிலை தொடர்கிறது. 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொடிக்குளம், சூரியா நகர் போன்ற பகுதிகளுக்குச் சென்றுதான் ரேசன்கடை யில் பொருட்கள் வாங்க வேண்டும். பிழைப்  புக்காக வெளியூர் செல்லும் நாங்கள் மூன்று  மாதத்திற்கு ஒரு முறை வருவதால் பொருட் கள் வாங்குவதில் சிரமம் ஏற்படுகிறது என்று கவலையுடன் தெரிவித்தார்.  முத்துமாரி என்ற வயதான பெண்மணி கூறுகையில், சில குடியிருப்புகளுக்கு மட்  டுமே பாதாளச்சாக்கடை இணைப்பு கொடுக் கப்பட்டுள்ளது. இதனால் தெருக்களில் கழிவு நீர் தேங்குவதால் சுகாதாரச்சீர்கேடு ஏற்பட்டு,  நோய் பரவலுக்கு குழந்தைகள் முதல் பெரிய வர்கள் வரை ஆளாகும் சூழ்நிலை உள்ளது. மாநகராட்சியில் 2001ஆம் ஆண்டு இணைக்  கப்பட்டடு பொதுக் கழிப்பறை கட்டப்பட்டது. தற்போது அது பயன்படுத்த முடியாமல் உள்ளது. பெண்கள் மற்றும் பள்ளிக்கு செல்  லும் சிறுகுழந்தைகள் உள்ள இப்பகுதிக்கு அடிப்படை வசதியினை செய்து கொடுக்க மாநகராட்சி முன்வர வேண்டும் என்று வலி யுறுத்தினார்.

பணம் செலுத்தியும்  குடிநீர் இணைப்பு இல்லை
மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மற்றொரு கிளைச் செயலாளர் ஐயப்  பன் கூறுகையில், அந்த னேரி பகுதியில் மிகவும்  வேதனையான விஷயம் நல்ல தண்ணீர் கிடைத்ததும்  இல்லை; குடித்ததும்  இல்லை. குடிநீர் குழாய் பதித்து பத்து ஆண்டு களுக்கு மேல் ஆகியும் எந்த பலனும் இல்லாத நிலை உள்ளது. நூறு வீடுகளுக்கு மேலாக  மாநகராட்சியில் ரூ. 3500 குடிநீர் இணைப்புக்கு பணம் கட்டியும் இதுவரை அதற்கான எந்த வேலையும் நடைபெறவில்லை. வாங்கிய பணத்திற்கு ரசீதும் வழங்கப்படவில்லை என்று தெரிவித்தார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் சபரி கூறுகையில், சாதிச்  சான்றிதழ் வாங்குவதில் மிகப் பெரும் சிர மம் உள்ளது. இரண்டு தலைமுறைகளாக குறிசொல்லும் தொழிலையே செய்துவிட்டு, தற்போது மூன்றாவது தலைமுறையாக எங்க ளது குழந்தைகள் பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரி வரை சென்றுள்ளனர். ஆனால் சரி யான சாதி சான்றிதழ் வாங்குவதில் தொடர்ந்து சிரமங்கள் ஏற்படுகின்றன என்றார்.

கண்டுகொள்ளாத அதிகாரிகள்
மேற்கண்ட கோரிக்கைகளை அரசு  நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி  தொடர்ந்து பல்வேறு இயக்கங்களும் நடத் தப்பட்டன. சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மனுக்கள் கொடுத்தோம். இதுவரை எங்கள் கோரிக்கைகளை ஆட்சியர்களும் அரசு அதி காரிகளும் காதுகொடுத்து கேட்க வில்லை என்பதுதான் மன வேதனையாக உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எங்களுடைய அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்ற அரசிடமும் மக்கள் பிரதிநிதிகளிடமும் உரிய அழுத்தத்தை கொடுத்து வருகிறது என்று அந்தனேரி பகுதி மக்கள் கூறினர்.

பாதை ஆக்கிரமிப்பை அகற்ற துணை மேயர் நடவடிக்கை
10-ஆவது வார்டுக்கு உட்பட்ட சம்பக்குளம் மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளைச் செயலாளர் ராஜூ கூறுகையில், இங்கு வசிக்  கும் மக்களில் ஒரு பிரிவினர் பொருளாதார ரீதியில் மிக வும் பின்தங்கியுள்ளனர். இந்தப் பகுதியில் உள்ள பெண்கள் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள கற்பகம் நகர், அழகர் நகர், புதூர் பகுதிகளுக்குச் சென்று வீட்டு வேலை செய்து வருகிறார்கள். 2016 ஆம் ஆண்டு வரை தாங்கள் வசிக்கும்  பகுதியில் இருந்து கற்பகம் நகர், புதூர் செல்வ தற்கு ஊர் பாதை வழியாக பத்து நிமிடத்தில் கடந்து தாங்கள் பணிக்குச் செல்லும் இடத் திற்கு சென்று விடுவார்கள். 2016 ஆம் ஆண்டு இறுதியில் தனியார் நிறுவனம் ஒன்று அரசு  நிலத்தை ஆக்கிரமித்து இப்பகுதி மக்கள்  பயன்படுத்தி வந்த பாதையை அடைத்து விட்டனர். அடைக்கப்பட்ட பாதையினை தனி யார் நிறுவனம் திறந்துவிடக் கோரி இப்பகுதி மக்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும்  பல்வேறு இயக்கங்களை நடத்தினர். கடந்த மாதம் மாநகராட்சி துணை மேயரிடம் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இப்பகுதி பொதுமக்கள் இணைந்து மனு அளித்தனர். மனுவை பெற்ற துணைமேயர் மறுநாளே  மாநகராட்சி சர்வேயர், திட்ட அலுவலர் ஆகி யோரை அழைத்து வந்தார். தனியார் நிறு வனம் அடைத்த பாதையினை பார்வையிட்டு நில அளவையர்களை வைத்து அளக்கப்பட்ட தில் அந்த இடம் அரசுக்கு சொந்தமான இடம்  தான் என்று கூறினர். கூடிய விரைவில் அந்த  பாதையை மக்கள் நடந்து செல்லும் பாதை யாக மாற்றுவோம் என்று துணை மேயர் உறுதி யளித்தார். தற்போது அந்த பாதையை திறந்து  விடுவதற்கான பணிகள் நடைபெற்று வரு கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எடுத்த  முன்முயற்சியால் இந்த நடவடிக்கை எடுக்கப்  பட்டுள்ளது. அந்தனேரி போலவே இந்தப்  பகுதி மக்களுக்கும் ரேசன் கடை கிடை யாது. இவர்கள் சில கிலோமீட்டர் தொலை வில் உள்ள கொடிக்குளம், காந்திபுரம் சென்று தான் பொருட்களை வாங்க வேண்டிய நிலை  உள்ளது. எனவே அதிகளவில் மக்கள் வசிக்கும் சம்பக்குளம் பகுதிக்கு தனியாக  ரேசன் கடை அமைத்துக் கொடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

மோசமான சாலைகளை சீரமைத்திடுக!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு - 2 பகுதிக்குழு செயலாளர் ஏ. பாலு  தெரிவிக்கையில், 10 ஆவது வார்டு பகுதியில்  உள்ள குளம், கண்மாயை தூர்வாரி ஆழப் படுத்த வேண்டும் என்பது இப்பகுதி மக்க ளின் நீண்ட கோரிக்கையாக உள்ளது. அந்த னேரி, சம்பக்குளம் இரண்டு பகுதி மக்களும்  நீண்ட தூரம் சென்று ரேசன் பொருட்கள் வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. சில நேரங்க ளில் அரிசி, பாமாயில், பருப்பு போன்ற பொருட்களில் ஏதாவது ஒருபொருள் இல்லை யெனில் அந்த பொருளை மட்டும் வாங்கு வதற்கு மீண்டும் அலையக்கூடிய நிலை உள்ளது. சூர்யா நகர், நலன்குளம், கடச்ச னேந்தல், குடிநீர் வடிகால் வாரிய நகர், அன்னை மீனாட்சி நகர், கற்பகம் நகர் 1 முதல் 11 தெருக்கள், அந்தனேரி, கொடிக்குளம் போன்ற பகுதிகளில் சாலைகள் மிக மோச மாக உள்ளது. அவற்றை சீரமைக்க மாநக ராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் மழைநீர் தேங்குவதால் நோய் பரவும் அபாயமும் உள்ளது. இப்பகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க மாவட்ட ஆட்சியர், அரசு அதிகாரிகள், மாநக ராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தனேரி, சம்பக்குளம் பொது மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தியும் மனுக்கள் அளித்தும் வலியுறுத்தி வருகிறோம். எனவே அரசும் மாவட்ட,மாநகராட்சி நிர்வாகங்கள் உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

-ஜெ.பொன்மாறன்