மதுரை, மே 9- நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மதுரை நாடாளுமன்றத் தொகுதிக்குள் அடங்கிய 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், தேர்தல் தொடர்பான ஆவணங்கள் மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பாது காப்பாக 3 அடுக்கு போலீஸ் காவலுடன் வைக்கப்பட்டுள்ளன. மேலும் பாதுகாப்பு அறைகளின் முன்புற மும், கல்லூரி வளாகத்தில் சுற்றிலும் பல இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இவைகளின் செயல் பாடுகளை கட்டுப்பாட்டு அறையிலும், வேட் பாளர்களின் முகவர்கள் காணும் வகை யிலும் தொலைக்காட்சி பெட்டிகள் வைக்கப் பட்டுள்ளன. இந்நிலையில், புதனன்று (மே 8) மின்னல், இடியுடன் கூடிய மழை பெய்ததால் சில சிசிடிவி கேமராக்கள் இயங்கவில்லை. இதையடுத்து மாவட்ட தேர்தல் அலுவல ரும், நாடாளுமன்றத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரான மா.சௌ.சங்கீதா, மதுரை மாநகர காவல் ஆணையர் லோக நாதன் நேரடியாக வாக்கும் எண்ணும் மையத்தை பார்வையிட்டார்.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகளுக்கு எதிரில் பொருத்தியிருந்த பிரத்யேகமாக அமைக்கப் பட்ட சிசிடிவி கேமராக்கள் இடையூறின்றி நல்ல முறையில் இயங்கி கொண்டிருந்தன. இதர சில சிசிடிவி கேமராக்கள் மட்டும் மின்னல் தாக்கல் காரணமாக இயங்காமல் இருந்தன.
சிசிடிவி கேமராக்களின் வாயிலாக பாதுகாப்பு அறைகளை வேட்பாளர்களின் முகவர்கள் இடையூறின்றி தொடர்ந்து பார்வையிட்டு வருகின்றனர். இயங்காமல் இருந்த கேமராக்களும் உடனடியாக சரி செய்யப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. இது போன்ற நிகழ்வுகள் எழாவண்ணம் சில முன்னெச்சரிக்கை உபகரணங்கள் பொருத்துமாறு ஒப்பந்ததாரருக்கு அறி வுரைகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலரும், மதுரை மாவட்ட ஆட்சி யருமான மா.சௌ.சங்கீதா தெரிவித்துள் ளார்.