districts

img

மோடி அரசை கண்டித்து சிபிஐ மறியல்: 500 பேர் கைது

திருவில்லிபுத்தூர், செப்.14- விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். வேலையில்லா திண்டாட் டத்தை போக்க வேண்டும். பேரூராட்சி பகு திகளுக்கும் 100 நாள் வேலை திட்டத்தை  வழங்க வேண்டும் என்பன கோரிக்கை களை வலியுறுத்தி வத்திராயிருப்பு பகுதி களில் 9 இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மறியல் நடைபெற்றது.  வத்திராயிருப்பில் தாலுகா செயலா ளர் கோவிந்தன் தலைமையிலும், வ.புதுப் பட்டியில் மாநிலக் குழு உறுப்பினர் ராமச்  சந்திரபாபு தலைமையில் 11 பெண்கள் உட்பட 36 பேரும், மகாராஜபுரத்தில் முன்  னாள் எம்பி அழகிரிசாமி தலைமையில் 52 பெண்கள் உட்பட 94 பேரும், கோட்டை யூரில் மாவட்டக் குழு உறுப்பினர் அம்மாசி  தலைமையில் 14 பெண்கள் உட்பட 20  பேரும், கூமாபட்டியில் பேரூர் செயலா ளர் துவான்ஷா தலைமையில் 31 பெண்கள்  உட்பட 58 பேரும், காடனேரி கிராமத்தில் தாலுகா துணை செயலாளர் தர்மராஜ் தலை மையில் 7 பெண்கள் உட்பட 26 பேரும், குன்னூரில் தாலுகா துணை செயலாளர் மகாலிங்கம் தலைமையில் 19 பேரும், சுந்தரபாண்டியம் பேரூராட்சியில் பேரூர் செயலாளர் பால்ராஜ் தலைமையில் 36 பெண்கள் உட்பட 48 பேரும், கிருஷ்ணன்  கோவிலில் ஒன்றிய துணை செயலாளர் செல்வம் தலைமையில் 37 பெண்கள் உட்பட 49 பேர் என சுமார் 500 பேர் கைது  செய்யப்பட்டனர். மத்தியக் குழு உறுப்பி னர் ராமசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.