திண்டுக்கல், ஏப்.8- திண்டுக்கல் அருகே வேடசந்தூரில் தனியார் பஞ்சாலையில் காலதாமத மாக வந்த துப்புரவுத் தொழி லாளியை சாதியைச்சொல் லித்திட்டி மேற்பார்வையா ளர் தாக்குதல் நடத்தினார். வேடசந்தூர் அருகே யுள்ள ஒரு தனியார் பஞ்சா லையில் கழிவறை சுத்தம் செய்யும் துப்புரவுத் தொழி லாளி ராஜசேகரன். இவர் சந் தைப்பேட்டையைச் சேர்ந்த வர். சனிக்கிழமையன்று காலை மில்லுக்கு 10 நிமிடம் காலதாமதமாக சென்றுள் ளார். இதனையடுத்து மேற் பார்வையாளராக பணியாற் றும் தாடிக்கொம்பு பகுதி யைச் சேர்ந்த பாலசுப்ரமணி என்பவர் ராஜசேகரனை சாதி யைச் சொல்லி இழிவாக பேசி யதோடு மினரல் வாட்டர் கேன் கொண்டு கடுமையாக தாக்கியுள்ளார். இதனை யடுத்து ராஜசேகரனுக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்ட காரணத்தால் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட் டார். தன்னை சாதியைச் சொல்லி தாக்கிய பாலசுப்ர மணியத்தை வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக் குப் பதிந்து கைது செய்ய வேண்டும் என்று ராஜசேகர னும் அவரது மனைவி தேவி யும் கேட்டுக்கொண்டுள்ள னர். (ந.நி.)