நாகர்கோவில், டிச.5- குமரி மாவட்டம் குழித்துறை நீதி மன்றத்தில் இளம்பெண் ஒருவர் தாக்கல் செய்த மனுவில், தன்னை பாலியல் வல்லு றவு செய்து கர்ப்பமாக்கியதுடன் கருக் கலைப்பும் செய்த காவல் ஆய்வாளர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி யிருந்தார். அதன்மீது நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் காவல் ஆய்வா ளர் உட்பட 8 பேர் மீது மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் அந்த பெண் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி அஜீஸ் என்பவர் ஏமாற்றிவிட்டார். இது குறித்த புகாருடன் பளுகல் காவல் நிலை யத்துக்கு சென்றேன். அப்போது அங்கு உதவி ஆய்வாளராக இருந்த சுந்தரலிங்கம் என்னிடம் விசாரித்தார். இந்த பிரச்சனை யால் குடியிருந்த வீட்டை காலி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சுந்தர லிங்கம் அவரது நண்பர் மூலம் இளஞ்சிறை பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தந்தார்.
பின்னர் வழக்கு விசாரணைக்கு என்று வீட்டுக்கு வந்தவர் என்னை பலாத்காரம் செய்தார். இதில் நான் கர்ப்பம் அடைந் தேன். இதுகுறித்து கூறியபோது கருவை கலைத்துவிடுமாறு கூறி மிரட்டினார். அவ ரது தூண்டுதலின் பேரில் பலரும் என்னை மிரட்டினார்கள். இது குறித்து காவல்நிலை யத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. எனது வழக்கில் உதவுவதாக கூறி என்னை பலாத்காரம் செய்த எஸ்ஐ மற்றும் அவருக்கு துணை நின்றதுடன் சட்டவிரோதமாக கருவை கலைக்க துணை நின்றதுடன் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் மிரட்டல் விடுத்த வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் மார்த் தாண்டம் அனைத்து மகளிர் காவல்நிலை யத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் வழக்கு பதிவு செய்யாத நிலை யில் அந்த பெண் சனியன்று (டிச.4) காவல் நிலையம் சென்று போராட்டத்தில் ஈடு பட்டார். அதைத் தொடர்ந்து உதவி ஆய்வா ளர் சுந்தரலிங்கம், ஏட்டு கணேஷ்குமார், தச்சன் விளாகத்தைச் சேர்ந்த விஜின் (3), அபிசேக் (25), மூவாற்றுக்கோணம் உமேஷ் (45), திருவட்டார் தனியார் கிளினிக் மருத்துவர் கார்மல் ராணி, மருத்துவனை நிர்வாக இயக்குநர் தேவராஜ், அனில் குமார் ஆகிய 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஐபிசி 323, 354 (ஏ), 376, 313 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதி வாகி உள்ளது. உதவி ஆய்வாளராக இருந்த சுந்தரலிங்கம் தற்போது பதவி உயர்வு பெற்று ஆய்வாளராக தேனி மாவட்டத்தல் பணியாற்றி வருகிறார்.