districts

மீனாட்சியம்மன் கோவிலின் மேல் ட்ரோன் இயக்கிய 2 பேர் மீது வழக்கு

மதுரை, ஜூன். 24- மதுரை மீனாட்சியம்மன் கோவில் கோபுரத்தின் மேற்  பரப்பில்  ட்ரோன் இயக்குவ தற்கு தடை விதிக்கப்பட் டுள்ளது  இந்த நிலையில் இரண்டு  தினங்களுக்கு முன்  பெங்க ளூரை சேர்ந்த தனியார் நிறு வனத்தின் இரண்டு பெண் பொறியாளர்கள் பிர்லா  விடு தியில் தங்கியிருந்து, அங்கி ருந்தபடி ட்ரோனை இயக்கி னர். அப்போது எதிர்பாராத விதமாக ட்ரோன் கோபு ரத்தின் மீது மோதி  கீழே விழுந்து நொறுங்கியது காவல்துறையினர் ட்ரோன் இயக்கிய இரு பெண் பொறி யாளர்களை பிடித்து விசா ரணை நடத்தினர். அப்போது ட்ரோன் இயக்க தடை இருப்பது தங்  களுக்கு தெரியாது என கூறி னர்.  இதனையடுத்து இருவரி டமும் கோவில் காவல்துறை யினர் விசாரணை நடத்தி னர். இதில், இவர்கள் மகா ராஷ்டிராவை சேர்ந்த சயலி  சிங்கர், ஸ்ருதி உர்குடே ஆகிய இரு பெண்கள் என்  பது தெரியவந்தது.  அனுமதி யின்றி கவனக்குறைவாக ட்ரோன் இயக்கியதாக இவர் கள் மீது வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை  மேற்கொண்டு வருகின்ற னர்.

அனுமதிக்கக் கூடாது: காவல்துறை

மதுரை மீனாட்சியம்மன் கோவிலை சுற்றி யுள்ள கட்டிடங்களின் மாடி பகுதிகளுக்கு அறிமுகம் இல்லாத நபர்களை அனுமதிக்கக்கூடாது என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சுற்றியுள்ள பகு திகளில் உயரமான கட்டிடங்களில் மாடிகளுக்கு செல்லும் பகுதிகளை கட்டிட உரிமையாளர்கள் அடைத்து வைத்திருக்க வேண்டும். அறிமுகம் இல்லாத  நபர்களையே சுற்றுலா பயணிகளையோ மாடிகளில்  அனுமதிக்கக் கூடாது என்று கட்டிட உரிமையா ளர்களுக்கும் தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கும்  காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பகுதி பாது காக்கப்பட்ட பகுதி ஆகும். இப்பகுதியில் உள்ள மாடி களில் அறிமுகம் இல்லாத நபர்களால் பாதுகாப்பற்றத் தன்மை உருவாகும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.