மதுரை, ஜன.28- மதுரை மக்களவை உறுப்பி னர் சு.வெங்கடேசன் மேலூர் தாலு காவில் நடத்திய மக்கள் சந்திப்பு இயக்கத்தில் மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த னர். இதை கவனத்தில் எடுத்துக் கொண்ட சு.வெங்கடேசன் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் மேலூர் தாலுகாவில் 3 ஊர்களில் கட்டுமானப்பணிகளை சனிக்கிழ மையன்று துவக்கி வைத்தார். கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் திருச்சுனை கிராமத்தில் பழமை யான அகஸ்தீஸ்வரர் கோவில் அருகே உள்ள சமுதாயக்கூடத் திற்கான உணவுக்கூடம் ரூ.20 லட் சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது. அதற்கான கட்டுமானப் பணிகளை துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து மேலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழையூர் ஊராட்சியில் அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான கீழை யூர் பேருந்து நிறுத்த நிழற்கூடை ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப் பட உள்ளது. அதற்கான கட்டு மானப் பணிகளையும் துவக்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக மேலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தனியாமங்கலம் பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான நியாயவிலைக் கடை ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் அமைப்பதற்கான கட்டிட பணியினையும் மதுரை மக் களவை உறுப்பினர் சு.வெங்க டேசன் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்தி ரன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ். பாலா, தாலுகாச் செயலாளர் எம்.கண்ணன் மற்றும் தாலுகாக் குழு உறுப்பினர்கள்,
அய்யாபட்டி ஊராட்சி தலைவர் கிருஷ்ணன் என்ற கெயின், கீழையூர் ஊராட்சி மன்றத் தலைவர் ஷீலா பிரபு, ஒன்றிய கவுன்சிலர் வெங்கடேசன், தனியாமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் குமார் மற்றும் அரசு அலு வலர்கள், ஒப்பந்ததாரர் லத்தீப் உட்பட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். மக்களின் கோரிக்கை களை சு.வெங்கடேசன் எம்.பி., நிறைவேற்றி வருவதாக மேலூர் தாலுகா மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் சு.வெங்கடேசன் எம்.பி., கூறுகை யில், கடந்த எட்டு ஆண்டுகளாக மோடி ஆட்சியில் உருவாக்கப்பட்ட அல்வா, அதானி, அம்பானி உள்ளிட்ட பெருமுதலாளிகளுக்கே இனிப்பை கொடுத்தது. ஆனால் 120 கோடி மக்களுக்கு கசப்பை யும்தான் கொடுத்துள்ளது. இந்த முறையும் அப்படி நடக்குமோ என்ற அச்சத்தோடு தான் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு செல்ல வேண்டியுள்ளது. பிபிசியின் ஆவணப்படத்தை மக்களிடம் கொண்டுசெல்ல விடா மல், எந்த விதத்தில் தடை விதிக்க வேண்டுமோ அதை எல்லாம் செய்து கொண்டு இருக்கிறார்கள். இது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது. எந்த ஒரு ஆவண படத்தையும் பார்ப்பதற்கு இருக் கும் உரிமையை யாராலும் பறிக்கமுடியாது. இதனை அனை வரும் பார்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.