திண்டுக்கல், பிப்.7- எரியோடு, வடமதுரையில் போட்டியிடும் மதச்சார்பற்ற ஜன நாயக முற்போக்கு கூட்டணி வேட் பாளர்களை அறிமுகம் செய்து வாக்கு சேகரிக்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. வடமதுரை பேரூராட்சியில் சிபிஎம் வேட்பாளர் மலைச்சாமி, எரியோடு பேரூராட்சியில் சிபிஎம் வேட்பாளர்கள் கல்பனா, காம லட்சுமி, அய்யலூர் பேரூராட்சி 1வது வார்டில் சிபிஎம் வேட்பா ளர் முருகேஷ்வரி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதே போல் திமுக, காங்கிரஸ் வேட்பா ளர்களும் போட்டியிடுகின்றனர். இவர்களை அறிமுகம் செய்து வாக்கு சேகரிக்கும் நிகழ்ச்சி ஞாயி றன்று நடைபெற்றது. உண வுத்துறை அமைச்சர் அர.சக்கர பாணி, வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன், கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதி மணி, சிபிஎம் தலைவர்கள் எம். ஆர்.முத்துச்சாமி, டி.முத்துச் சாமி, பெரியசாமி, கிருஷ்ண மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்ற னர். (ந.நி)