மதுரை, நவ.7- மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள கால்வாய் கள் மற்றும் மழையால் சிதி லமடைந்த சாலைகளை சீர மைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டக்குழு வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட மதுரை மைய பகு திகள் மேலும் புறப் பகுதி களில் சமீபத்தில் பெய்த மழையினால் சாலைகளில் மழைநீர் தேங்கியும், சில பகுதிகளில் கழிவுநீர் தேங்கியும் நிற்கும் அவலம் நீடிக்கின்றது. மாநகராட்சி மூலம் மழை நீர் வடிகால் என்பது கட் டப்பட்டது. அதில் மழைநீர் என்பது செல்லாமல் குப்பை மற்றும் மணல் போன்ற வைகளால் மழைநீர் கால் வாய்களில் அடைப்பு ஏற் பட்டு அதில் மழைநீர் செல் லாத முடியாத நிலை உள் ளது. சாலையில் தேங்கும் மழைநீரால் இருசக்கர வாக னம் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் பெரும் அவ திக்குள்ளாகின்றனர். போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. சில இடங்க ளில் பெரும் பள்ளங்கள் உள்ளது தெரியாமல் வாகன ஓட்டிகள் பள்ளங்களில் விழுந்து விபத்துக்கு உள் ளாகிறார்கள். அதனால் சாலையில் மழைநீர் தேங்காமல் மழை நீர் கால்வாய்களில் மழைநீர் செல்வதற்கு போர்க்கால அடிப்படையில் மதுரை மாநகராட்சி நிர்வாகம் மாநில. தேசிய நெடுஞ் சாலைத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண் டும். தண்ணீர் தேங்கியுள்ள சாலைகளில் பேரிடர் குழு மூலமாக மின் மோட்டார் களை வைத்து தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சி பகுதி களில் தற்போது சிதிலம டைந்துள்ள சாலைகளை உடனடியாக சீரமைத்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.