districts

img

மோடியே வெளியேறு இயக்கத்தை விளக்கி தேனியில் பிரச்சாரம்

தேனி, ஆக.1- ஆகஸ்ட் 9 ஆம் தேதி சென்னையில் நடைபெறும்  மோடியே வெளியேறு இயக் கத்தை விளக்கி தேனியில்  அனைத்து தொழிற்சங்கங்க ளில் சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது. தேனி பழைய பேருந்து நிலையம் அருகே நடை பெற்ற மக்கள் சந்திப்பு இயக்  கத்திற்கு தொ.மு.ச மாவட்  டச்செயலாளர் எம்.முருகன்  தலைமை வகித்தார்.சிஐடியு தேனி மாவட்டச் செயலாளர் எம்.ராமச்சந்திரன் தொடக்கவுரையாற்றினார்.தொ.மு,ச மாவட்ட கவுன்சில்  தலைவர் எம்.வீரமுத்து,ஏஐ டியுசி மாவட்டச் செயலா ளர் எம்.எஸ்.பி.ராஜ்குமார், ஐஎன்டியுசி மண்டல தலை வர் ஆர்.ஜெகநாதன்,சிஐடியு தேனி மாவட்ட தலைவர் டி. ஜெயபாண்டி ஆகியோர் உரையாற்றினர். இதில் சிஐடியு மாவட்ட  பொருளாளர் ஜி.சண்முகம், மாவட்ட நிர்வாகிகள் ஏ. முருகவேல்,மணிமாறன் சோலை உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்ட னர்.