districts

img

கொரோனா மூன்றாவது அலை தடுப்பு பணிகள் ஒன்றிணைந்து செயல்படஅதிகாரிகளுக்கு அழைப்பு

நாகர்கோவில், ஜன.11- கொரோனா மூன்றாவது அலை தடுப்பு பணிகளில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒன்றிணைந்து செயல்பட, கலந்தாய்வுக்கூட்டத்தில் துறை அலுவலர்களுக்கு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் அழைப்பு விடுத்தார். கன்னியாகுமரி மாவட்டம், ஆசா ரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை கூட்டரங்கில் கொ ரோனா மூன்றாவது அலை தடுப்பு  பணி குறித்து, வருவாய்த்துறை, மருத்துவத்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவ லர்களுடன் கலந்தாய்வுக்கூட்டம், மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், தலை மையில் திங்களன்று (ஜன.10) நடைபெற்றது. இக்கூட்டத்தில், பங்கேற்ற அமைச்சர் கூறியதாவது:  கொரோனா  மூன்றாவது அலை தொற்றானது மூன்று மடங்கு வேகத்துடன் அதிகரிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரி வித்துள்ளார்கள். இதனை எதிர்கொள் ளும் விதமாக முதற்கட்டமாக கன்னி யாகுமரி மாவட்டத்தின் அரசு மருத்துவமனைகள், கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள்,  கோணம் அரசு பொறி யியல் கல்லூரி மற்றும் தனியார் மருத்துவமனைகள் உட்பட மாவட்டத் தின் பல்வேறு பகுதிகளில் 1400 படுக் கைகள் கொண்ட நோய் கவனிப்பு  மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. படுக்கைகள் தேவைப்படும் பட்சத்தில் கூடுதலாக மையங்கள் அமைக்கப் படும். பத்மநாபபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  பரிசோதனை மையம் புதிதாக அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், கன்னியாகுமரி மாவட் டத்தில் கொரோனா  மூன்றாவது அலையில்   பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதி கரித்து வருகிறது. ஞாயிறன்று  ஒரே நாளில் 200-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என சுகாதார அலுவலர்கள் தெரிவித்துள்ளார்கள். தற்போது குமரி மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  ஒரு நிமிடத்திற்கு ஆயிரம் லிட்டர் ஆக்சி ஜன் உற்பத்தி செய்யும் மையம் ஏற் படுத்தப்பட்டு உள்ளது.  இது தவிர அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பத்மநாபபுரம் தலைமை மருத்துவ மனை உள்ளிட்ட மருத்துவமனை களில் சுமார் 20,000 கிலோ லிட்டர் ஆக்சிஜன் இருப்பு வைக்கும் வகை யில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே ஆக்சிஜன் தட்டுப்பாடு என்ற நிலை மாவட்டத்தில் ஏற்படாத வகை யில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது. இதுதவிர நெய்யூர் சிஎஸ்ஐ மருத் துவமனை, நாகர்கோவில் ஜெய சேகரன் மருத்துவமனை, குலசேகரம் ஸ்ரீ முகாம்பிகை மருத்துக்கல்லூரி மருத்துவமனை ஆகிய மூன்று மருத்துவமனைகளில் 500 லிட்டர் உற்பத்தி செய்யும் ஆக்சிஜன் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே இந்த முறை ஆக்சிஜன் தட்டுப்பாடு என்ற நிலை ஏற்படாது என்பதை இத்தருணத்தில் தெரி வித்துக்கொள்வதோடு, எந்த சூழ் நிலையிலும்  நிலைமையை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. கொரோனா பரவல் தற்போது அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகளை உடனடியாக முடிக்க வேண்டும் என்று அதிகாரிக ளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கேரள வழியாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகைபுரியும் வெளிமாநில மற்றும் வெளிநாடுக ளிலிருந்து பயணிகள் மற்றும் பொது மக்களை கண்காணிக்க சுகாதார பணி யாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள் ளது.  மேலும், மருந்துகள், முகக்கவ சம் உள்ளிட்ட மருத்துவ உபகரணங் கள் தேவைக்கேற்ப இருப்பு வைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் திரு விழாக்கள், குடும்ப நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். முகக்கவசம் அணிவது, கைகழுவும் திரவம் பயன்படுத்துவது மற்றும் சமூக இடைவெளியினை கடை பிடிப்பது உள்ளிட்ட தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடை பிடித்து மாவட்ட நிர்வாகம் மேற்கொள் ளும் அனைத்து நடவடிக்கைகளுக் கும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டு மென அமைச்சர் கேட்டுக்கொண்டார். இக்கூட்டத்தில், மாவட்ட வரு வாய் அலுவலர் அ.சிவப்பிரியா, நாகர் கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் திருவாசகமணி, இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) எ.பிரகலாதன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) சு.மீனாட்சி, கண்காணிப்பாளர் அருள்பிரகாஷ், கொரோனா கண்கா ணிப்பாளர் பயாஸ், உறைவிட மருத்து வர் ஆறுமுக வேலன், உதவி உறை விட மருத்துவர்கள் மினி மோள், விஜயலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.