districts

img

அரசுப் பள்ளி அருகே கல்குவாரி: அகற்றக் கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

விருதுநகர், ஜன.24- விருதுநகர் மாவட்டம் இராஜபாளை யம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூ ரில் அரசுப் பள்ளி மற்றும் அரசு மருத்துவ மனை அருகே இயங்கி வரும் கல்குவா ரியை அகற்ற வேண்டுமென அப்பகுதி பொது மக்கள் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தை திங்களன்று முற்றுகையிட்டனர். இராஜபாளையம் ஒன்றியம், சொக்க நாதன்புத்தூரில் அரசு மருத்துவமனை மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகி யவை உள்ளன. இதன் அருகே உள்ள சிறிய மலையில் கல்குவாரியில் வெடி வைத்து பாறைகளை உடைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், பள்ளிக் கட்டிடம் அதிர்வடைகிறது.  அதிக சத்தம் ஏற்படுவதால் மருத்துவ மனைக்கு வரும் நோயாளிகள் பாதிக் கப்படுகின்றனர். மேலும் விவசாய நிலங்களும் பாதிப்படைகிறது. எனவே, மனித உயிர்களுக்கு ஆபத்தான முறை யில் செயல்பட்டு வரும் கல்குவாரி உரி மத்தை ரத்து செய்ய வேண்டும் என அப் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர், சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்பு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் மனு அளிக்க உரிய ஏற்பாடுகளைச் செய்தனர்.