districts

img

பேருந்து நிலைய அடிக்கல் நாட்டு விழா

சின்னாளப்பட்டி, செப்.11-  ரூ.2.43 கோடி செலவில் புதுப்பிக் கப்பட உள்ள சின்னாளப்பட்டி சிறப்பு நிலை  பேரூராட்சிக்குட்பட்ட காமராஜர் பேருந்து  நிலைய அடிக்கல் நாட்டு விழா திங்க ளன்று நடைபெற்றது.  நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் இ.பெரியசாமி அடிக்கல்லை நாட்டினார். ஆத்தூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். சிபிஎம் சார்பில் வி.கே.முரு கன், சின்னாளப்பட்டி பேரூராட்சி மன்ற  தலைவர் பிரதீபா கனகராஜ், துணைத் தலை வர் ஆனந்தி பாரதிராஜா, செயல் அலு வலர் செல்வராஜ், திமுக நகர நிர்வாகிகள் நகரச் செயலாளர் மோகன்ராஜ், நகரப் பொருளாளர் எஸ்.ஆர்.முருகன், அவை தலைவர் பாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.