எரிச்சலடைந்த பொதுமக்கள்
விருதுநகர், ஆக.10- விருதுநகர் மாவட்டத்தில் இரண்டே நாட்களில் நடைபயணம் நடத்திய பாஜக அண்ணாமலையின் பில்ட் அப் ‘சாதனை’ யை பார்த்த பொதுமக்கள் மிகவும் எரிச்ச லடைந்தனர். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள மந்திரி ஓடை கிராமத்தில் கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி என் மண், என் மக்கள் என்ற பெயரில் நடைபயணத்தை துவங்கினார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. அங்கிருந்து திருச்சுழி வழியாக அருப்புக்கோட்டை வரை தனது பிரச்சாரத்தை முடித்துக் கொண்டார்.
கெஞ்சிக்கூத்தாடி மாலையணிவிப்பு
அருப்புக்கோட்டை பாலையம்பட்டி யில் உள்ள முத்தரையர் சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்ற போது, அப்பகுதி யினர் அவரை தடுத்து நிறுத்தி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பாஜக வினர் அதிர்ச்சியடைந்தனர். பின்பு, ஒரு வழி யாக சமாதானம் பேசி, கெஞ்சிக்கூத்தாடி னர். அதன் பிறகே, சிலைக்கு மாலை அணி விக்க அப்பகுதி மக்கள் அனுமதி வழங்கி னர். பின்னர், அருப்புக்கோட்டையில் பேசிய அண்ணாமலை, மிகப் பெரிய கூட்டம் அங்கு வந்துள்ளதாகவும், ஆளும் கட்சிக்கு எதி ராக இக்கூட்டம் திரண்டுள்ளதாகவும் அடித்துவிட்டார்.
பயணிகள் பாதிப்பு
இதற்கிடையே அவர் நடைபயணம் துவங்கிய பாண்டியன் நகர் பகுதி மல்லாங்கிணறு சாலையாகும். எனவே, அங்கு போக்குவரத்து தடை செய்யப் பட்டது. பேருந்துகள் அவ்வழியே இயக்கப்படவில்லை. இரு சக்கர வாக னங்களில் செல்வோரை காவல்துறை யினர் வேறு பகுதி வழியாகச் செல்ல அறி வுறுத்தினர். காரியாபட்டி செல்லும் பேருந்து கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் பாதிப்படைந்தனர். நிறத்தப்பட்ட பேருந்து அண்ணாமலை நடை பயணத்திற்காக விருதுநகரில் இருந்து பேராலி செல்லும் பேருந்தானது ரயில்வே பீடர் சாலையில் சுமார் 1 மணி நேரம் வரை நிறுத்தி வைக்கப் படடது. இதனால் பேருந்தில் இருந்த பயணி கள் கடுப்படைந்தனர். இதனால் பேருந்து தாமதமாக பெரிய பேராலிக்கு சென்றது
நோயாளிகள் அவதி
மல்லாங்கிணறு சாலையில் இருந்து ராமமூர்த்தி சாலை வழியாக நடைபய ணம் வருவதால், அந்த வழியாக இரு சக்கர வாகனங்கள் செல்லவும் அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் ராமமூர்த்தி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். மேலும், ராமமூர்த்தி சாலையில் அண்ணாமலைக்கு மலர் தூவி பாஜகவினர் வரவேற்பு அளித்தனர். இதனால், நகரின் முக்கிய சாலையான அப்பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட் டது.
அமைச்சர் வீடு முன்பு
வெறிக் கூச்சல்
நடைபயணமாக அண்ணாமலையுடன் வந்த பாஜகவினர் ராமமூர்த்தி சாலையில் உள்ள தமிழக வருவாய் -பேரிடர் மேலாண் மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வீட்டின் முன்பு வந்தவுடன் நின்று கொண்டனர். பின்பு, பாரத் மாதாகி ஜே என நீண்ட நேரம் வெறிக் கூச்சலிட்டனர். இதை ஏற்கனவே அறிந்திருந்த காவல்துறையினர், அமைச்சர் வீட்டின் முன்பு 40-க்கும் மேற்பட்ட காவலர்களை பாதுகாப்பிற்காக நிறுத்தி வைத்திருந்தனர். இதனால் வேறு வழியின்றி மெதுவாக நகர்ந்து சென்றனர்.
சேலை, குடம் வழங்கல்
அண்ணாமலையை வரவேற்ற பெண்கள் பலர் தாமரை சின்னம் அச்சி டப்பட்ட சேலைகள் அணிந்திருந்தனர். ஆண்களில் பலருக்கு என் மண், எண் மக்கள் என எழுதப்பட்ட வெள்ளை நிறச் சட்டை வழங்கப்பட்டிருந்தது. மேலும் பல பெண்களுக்கு சிறிய சில்வர் குடங்கள் வழங்கப்பட்டிருந்தன. வரவேற்றவுடன் இப்பெண்கள் அனைவரும் குடத்துடன் தாங்கள் வந்த வாகனங்களுக்கு சென்று விட்டனர். வரவேற்பதற்காகவே இது போன்ற பொருட்கள் வழங்கியதாக கூறப்படுகிறது. நடைபயணத்தில் துவக்க நிலையில் 200 பேர் வந்த நிலையில், நேரம் ஆகஆக அது பாதிக்கும் மேல் குறைந்தது. ஆனால், அண்ணமாலையின் பின்னால் 40 விலை உயர்ந்த கார்கள் பவனி வந்தன. இதைப் பார்த்த பொது மக்கள், இதற்காகவா, இவ்வ ளவு பில்ட்-அப்பு என எரிச்சலடைந்தனர்.
நிறைவாக காமெடி செய்த அண்ணாமலை
விருதுநகர் மாவட்டம் மிகவும் பின் தங்கிய மாவட்டமாம். அதற்காகத்தான் விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கு எய்ம்ஸ் மருத்துவமனையை பாஜக அரசு அறிவித்ததாம். இம்மாவட்டத்தை முன்னேற்ற மோடி இரவு, பகலாக உழைக்கிறாராம். காலை யில் எழுந்தவுடன் இரவு உறங்கச் செல்லும் வரை தமிழ்நாடு, தமிழ்நாடு என கூறு கிறாராம். எப்போதும் தமிழ் மக்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டே இருக்கி றார். எனவே, பிரதமர் நரேந்திரமோடி, குஜ ராத்காரர் அல்ல, அவர் குஜராத் தமிழர் என ஒரே போடாக போட்டார். இதனால் அவ ரது பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த பொது மக்களில் பலர் அங்கிருந்து நடை யைக் கட்டினர். முன்னேறத் துடிக்கும் 112 மாவட்டங்க ளில் விருதுநகர் மாவட்டமும் ஒன்று. எனவே ஒன்றிய அரசு இந்த மாவட்டத்தை தத்தெ டுத்துள்ளது என தெரிவித்தார். இம்மாவட் டத்திற்கென தனிக்கவனம் செலுத்துகிறது என்றார். ஆனால், உண்மை நிலவரம் என்னவெனில், விருதுநகர் மாவட்டத்தை முன்னேற்ற எவ்வித நிதியையும் பாஜக அரசு ஒதுக்கீடு செய்யவில்லை.
விலைஉயர்வு பற்றி வாய்திறக்கவில்லை
விருதுநகர்-சாத்தூர் சாலையில் ஜவுளிப் பூங்கா அமைக்க விருதுநகர் மாவட்டத்திற்கு 2ஆயிரம் கோடி ரூபாய் வழங்கியுள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்தார். ஆனால், ஏற்கனவே காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க இந்த இடம் தேர்வு செய்யப்பட்டு நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்க இருந்தது. திமுக ஆட்சியால் தான் தமிழ்நாடு பின்தங்கி உள்ளதாக தெரிவித்தார் அண்ணாமலை. ஆனால், வட மாநிலங்க ளில் பாஜக ஆட்சியால் ஏற்பட்ட முன்னேற் றத்தைப் பற்றி ஒரு வார்த்தைகூட பேச வில்லை. மேலும், மணிப்பூர், ஹரியானா மாநிலத்தில் நடைபெற்று வரும் கல வரங்கள் பற்றியும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வு ஆகியவற்றைப் பற்றியும் மறந்தும் கூட வாய்திறக்கவில்லை. கூட்டிக் கழித்துப் பார்த்தால் அண்ணாமலையின் பேச்சு முழுவதும் அப்பட்டமாக 2024 மக்களவைத் தேர்தலை நோக்கியே இருந்தது. அவர் பேசத் துவங்கி யதும் “மீண்டும் வேண்டும் மோடி“ என் றார். மேலும், மக்களவைத் தேர்தல் அறி வித்தவுடன் பாஜக வெற்றி பெற்று விடும் என்றார். தேர்தல் அறிவித்ததும் எப்படி ஒரு கட்சி வெற்றி பெற முடியும். அதோடு அவர் விடவில்லை. தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றால் இந்தியா முழுவதும் 400 இடங்க ளில் வெற்றி பெறுவார்களாம். இல்லை யேல் 360 தொகுதியாம்.
மிஸ்டு கால் மூலம் ஆள் சேர்ப்பு
அண்ணாமலையின் பிரச்சார வாக னத்தின் பின்னால் மற்றொரு வாகனமும் செல்கிறது. அதில் வருபவர்களுக்கு வேலை என்னவென்றால், அண்ணமாலை பேசத் துவங்கியதும், பின்னால் வந்த வாகனத்திலிருந்து ஒரு கடை விரிக்கப்படு கிறது. அதில் மிஸ்டு கால் கொடுத்தால் பாஜகவில் உறுப்பினராகி விடலாம் என செல்போன் எண்ணை எழுதி வைத்துள்ள னர். அண்ணாமலையின் பேச்சை கேட்டு பலர் ஓடினால், இந்த மிஸ்டு கால் கடையை பார்த்த பலர் தலைதெறிக்க ஓட்டம் பிடித்த னர். (ந.நி)