districts

img

விருதுநகர்-சாத்தூர் 4 வழிச்சாலையில் சேவை சாலை அமைத்திடுக!

விருதுநகர், ஜூலை 5- விருதுநகர்-சாத்தூர் 4 வழிச் சாலை யில் உள்ளது துலுக்கபட்டி முக்குரோடு. இங்குள்ள 4 வழிச் சாலையின் மேற்கு  பகுதியில் தனியார் சிமிண்ட் ஆலை  உள்ளது. அப்பகுதியில் சேவைச் சாலை அமைக்கப்பட்டது. ஆனால்,  தற்போது வரை கிழக்குப் பகுதியில்  சேவைச் சாலை அமைக்கப்பட வில்லை. இதனால், 4 வழிச் சாலையில் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து உயிர்ப்  பலி ஏற்படுகிறது. எனவே, உடனடியாக சேவைச் சாலை அமைக்கக் கோரி போராட்டம் அறிவிக்கப்பட்டது. பின்பு, வட்டாட்சி யர் தலைமையில் பேச்சுவார்ர்த்தை நடைபெற்றது. இதில் உடனடியாக சேவைச் சாலை அமைக்கப்படும் என உறுதியளித்தனர். ஆனால், சொன்னபடி சாலை  அமைக்கப்படவில்லை. இதை யடுத்து, அனைத்துக் கட்சிகள் சார்பில் முக்குரோட்டில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு திமுக சார்பில் தேவராஜ் தலைமை யேற்றார். சிபிஎம் தெற்கு ஒன்றிய செய லாளர் பி.நேரு, சிபிஐ மாநிலக்குழு உறுப்பினர் வி.பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விசிக சார்பில் லிங்கசாமி, மதிமுக சார்பில் மோகன்  குமார், ஜமாத் தலைவர் சபூர் மரைக்காயர், மனிதநேய மக்கள் கட்சி யின் சிக்கந்தர்பாட்சா, சிபிஎம் மாவட் டக்குழு உறுப்பினர் எம்.சி.பாண்டியன் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.