நாகர்கோவில்/தென்காசி, பிப்.11- பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு, கடந்த ஆண்டை விட நிகழாண்டு பட்ஜெட்டில் விவசாயத்திற் கான நிதியை ரூ.900 கோடி குறைவாக ஒதுக்கீடு செய்துள்ளது. இதைக் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்-அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டமும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்-அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கோவில்பட்டியில் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கு.ரவீந்திரன், எட்டையபுரம் தாலுகா தலைவர் கருப்பசாமி, விவசாயி கள் சங்க எட்டையபுரம் தாலுகா செயலா ளர் நடராஜன், கோவில்பட்டி ஒன்றியத் தலைவர் ராமசுப்பு, சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவில்பட்டி ஒன்றியச் செயலாளர் தெய்வேந்திரன், விளாத்திகுளம் ஒன்றியச் செயலாளர் ஜோதி, கனேசன், செல்வக்குமார், மணி, பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் நல்லையா தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் விவசாயத் தொழிலாளர் கள் சங்க மாவட்டத் தலைவர் குணசீலன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் இ.பாலு, வெற்றிவேல், சந்தன குமார். பால்ராஜ், நயினார் உட்பட ஏராளமா னோர் பங்கேற்றனர்.
திருவேங்கடத்தில் தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நகல் எரிப்புப் போராட்டத்திற்கு தாலுகா தலை வர் ஆர்.ராமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் எஸ்.வேணுகோபால், வழக்கறிஞர் ராகவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் எஸ்.கருப்பசாமி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் கே.மாடசாமி, திருமாறன், ஜி.சிவகுமார், வி.சுப்ரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.
நாகர்கோவில்
நாகர்கோவிலில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் கன்னியாகுமரி மாவட்ட விவசாயி கள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.ரவி, மாவட்டத் துணைத் தலைவர் என்.முரு கேசன், என்.எஸ். கண்ணன், எஸ்.விஜி, ஆர்.குமரேசன், விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் மலைவிளை பாசி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.