மதுரை, ஜூன் 22- ஓய்வூதிய உயர்வை உடனே வழங்க வேண்டும். முடக்கப்பட்ட ஐடிஏவை உடனே வழங்க வேண்டும். நிலு வையில் உள்ள மருத்துவபடி மருத்துவ பில்களின் பணத்தை உடனே வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி புதனன்று மதுரை தல்லாகுலம் பிஎஸ்என்எல் அலு வலகத்தில் மாவட்டத் தலைவர் உதயக்குமார் தலை மையில் தர்ணா நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் செல்வீன் சத்தியராஜ், மாநில நிர்வாகி சுந்தரராஜன் ஆகியோர் பேசினர். பிஎஸ்என்எல் எம்ப்ளாயீஸ் யூனியன் மாவட்டச் செயலாளர் ரீச்சார்ட் ஆதரித்தப் பேசினார், சங்கத்தின் மாவட்ட பொருளாளர் சண்முகம் நன்றி கூறினார்.