விருதுநகர், ஜூலை 20- கடந்த 2017 ஜனவரி 1 முதல் 15 சதவீத பிட்டு மெண்டுடன் கூடிய ஓய்வூ திய மாற்றத்தை வழங்க வேண்டும். முடக்கப்பட்டட ஐ.டி.ஏ வை உடனே வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள மருத்துவப்படி மற் றும் அலவன்சை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய பிஎஸ்என்எல்-டி.ஓ.டி ஓய்வூ தியர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. விருதுநகர் பொது மேலா ளர் அலுவலகம் முன்பு நடை பெற்ற இப்போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஜி. செல்வராஜ் தலைமையேற் றார். சங்கையா, பொன் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செய லாளர் கே.புளுகாண்டி துவக்கி வைத்துபபேசினார். மாநில உதவித் தலைவர் எம். பெருமாள்சாமி, ஜேசிடியு தலைவர் தேனிவசந்தன் ஆகியோர் கண்டன உரை யாற்றினர். மேலும்இதில், பிஎஸ்.என்.எல்.இ.யு மாவட் டச் செயலாளர் ஏ.குருசாமி, வங்கி ஊழியர் சங்கத்தின் மாரிக்கனி, அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் குருசாமி, ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் எம்.முத் துச்சாமி ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.
மதுரை
மதுரை தல்லாகுளம் பிஎஸ்என்எல் அலுவல கத்தில் மாவட்டத்தலைவர் என். உத்திரக்குமார் தலை மையில் தர்ணா நடைபெற் றது. மாநில உதவித் தலை வர் எஸ். ஜான்போர்ஜியோ துவக்கி வைத்து பேசினார். சிஐடியு மாவட்டச் செயலா ளர் இரா. தெய்வராஜ், காப் பீட்டு கழக ஓய்வூதியர் சங்க அகில இந்திய துணை தலை வர் சி. சந்திரசேகரன், சங் கத்தின் மாநில நிர்வாகி எச். ஸ்ரீராமன் மற்றும் தோழமை சங்க நிர்வாகிகள் பேசினர். மாவட்டச்செயலாளர் சி. செல்வின் சத்தியராஜ் கோரிக்கை விளக்கி பேசி னார். மாநில உதவிச்செய லாளர் ஜி. சுந்தரராஜன் நிறை வுரையாற்றினார். மாவட்டப் பொருளாளர் ஆர். சண்முக வேல் நன்றி கூறினார்.