மதுரை அரசரடி - காளவாசல் மெயின் ரோடு எஸ். எஸ். காலனி வடக்கு வாசல் மெயின் ரோடு சந்திப்பில் கடந்த இரண்டு வாரங்களாக குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக சாலையில் ஓடுகிறது. வாகன போக்குவரத்து அதிகம் உள்ளதால் குழாயில் உடைப்பு பெரிதாகி கடந்த இரண்டு தினங்களாக ஊற்றுபோல் தண்ணீர் அதிகம் வெளியேறி வருகின்றது .இதனால் சாலையில் பள்ளம் ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக குழாய் உடைப்பை சரி செய்திட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.