தேனி, அக்.30- தேனி மாவட்டம் கூடலூர் ராஜீவ் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கொடியரசன் ,இவரது மகன் கெளதம்( 31) கடந்த 13 வரு டங்களாக எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரிந்து வந்தார். தற்போது இவர் மேற்கு வங்காளத்தில் பாக்டோக்ரா அருகில் உள்ள டாங்கிபிரா பகுதி யில் உள்ள எல்லை பாதுகாப்பு படைமுகாமில் சிவில் எலக்ட்ரிசியன் உதவியாளராக பணிபுரிந்தார். இந்நிலையில் கடந்த 28 ஆம் தேதி பணி யில் இருந்தபோது எதிர்பாராமல் மின்சாரம் தாக்கியது, அவரை உடனடியாக இஸ்லாம்பூர் துணை பிரிவு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரி வித்தனர். கௌதம் உடல் இன்று (திங்கட்கிழமை) காலை கூடலூ ருக்கு கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இறந்த கௌதமுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகி றது. கௌசல்யா என்ற மனைவி உள்ளார்.