தேனி, பிப்.2- குடியரசு தினத்தில் மோடி அரசால் புறக்கணிக்கப்பட்ட தமிழக சுதந்திர போரா ட்ட வீரர்களில் பங்களிப்பை போற்றும் வகை யில் வடிவமைக்கப்பட்ட அலங்கார ஊர்தி தேனிக்கு பிப்ரவரி 8 ஆம் தேதி வருவதை முன்னிட்டு தேனி ஆட்சியர் முரளீதரன் தலைமையில் முன்னேற்பாடு கூட்டம் நடை பெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் முரளீ தரன் பேசியதாவது: சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேயர்களை தீரமுடன் எதிர்கொண்ட தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் பங்க ளிப்பை போற்றி பெருமைப்படுத்தும் வகை யில் தமிழ்நாடு அரசின் சார்பில் 3 அலங்கார ஊர்திகள் வடிவமைக்கப்பட்டு அணி வகுப்பில் பங்கேற்று பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளது. அவற்றில் ஒரு அலங்கார ஊர்தி பிப்ரவரி 8 அன்று தேனி மாவட்டத் திற்கு வருகை தர உள்ளது. மாவட்டத்திற்கு வருகைதரவுள்ள வேலு நாச்சியார் அலங்கார ஊர்திக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தும், மாவட்டத்தில் முக் கிய பகுதிகளில் பொதுமக்கள் சிரமமின்றி பார்வையிட ஏதுவாக வசதியான மற்றும் பாதுகாப்பான இடம் தேர்வு செய்திடவும், அலங்கார ஊர்தி திண்டுக்கல் மாவட்டத் திற்கு செல்லும் வரை வாகனம் செல்லும் வழிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் உரிய பாதுகாப்பு வசதி மேற் கொள்ளுதல், அலங்கார ஊர்தி செல்லும் வழிகளில் இடையூறு ஏற்படாத வகையில் தாழ்வான நிலையில் உள்ள மின் விநியோக கம்பிகள் மற்றும் மரங்கள் குறித்து கள ஆய்வு செய்து உரிய முன்னேற்பாடு பணி களை அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். இதில், மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் பிரவிண் உமேஷ் டோங்கரே, மாவட்ட வருவாய் அலுவலர் தி.சுப்பிரமணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஆர்.தண்டபாணி, உதவி இயக்கு நர் (பேரூராட்சிகள்) இரா.முத்துக்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.சண்முகசுந்தரம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) நா.விஜயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.