districts

img

சிவகங்கை புத்தக திருவிழாவில் ரூ.2.36 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை

சிவகங்கை, ஏப்.28- சிவகங்கையில் 11 நாட்கள் நடைபெற்ற புத்தக திருவிழாவில்  ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பார் வையாளர்கள் வருகை புரிந்த னர். ரூ.2.36 கோடிக்கு புத்த கங்கள் விற்கப்பட்டுள்ளன.  சிவகங்கையில் மன்னர் மேல்  நிலைப் பள்ளி வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பபாசி சார்பில் 11 நாட்கள் நடைபெற்ற முதல் புத்தகத் திருவிழாவின் நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் மதுசூதனன் ரெட்டி தலைமை வகித்து உரை யாற்றினார. அவர் பேசுகையில், சிவகங்கையில் முதன்முறை யாக பெரிய அளவிலான புத்த கத் திருவிழா லட்சத்துக்கும் மேற்  பட்ட மக்கள் ஆதரவோடு நடத் தப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் அரசு சார்பில் நூலகங்கள், கிராம அளவில் உள்ள நூலகங்கள் மற்றும் நடுநிலைப் பள்ளி, மேல் நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளியில் உள்ள நூலகங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்  படுத்துவதற்கும் மாவட்டத்தி லுள்ள நூலகங்களை மேம் படுத்துவதற்கு நூலகத்தில் உள்ள பல்வேறு வகையான புத்த கங்களை நிறுவுவதற்கும் ஏரா ளமானோர் முன்வந்து இப்புத்தக திருவிழா மூலம் உதவியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் போட்டித் தேர்வுகளுக்கு படிக்கக்கூடிய வேலையில்லா இளைஞர் களுக்கு வழிகாட்டும் நிகழ்வா கும் புத்தகத் திருவிழா அமைந்  தது. இந்தப் புத்தகத் திருவிழா வில் 5 லட்சம் புத்தகங்கள் ரூ. 2 கோடியே 36 லட்சத்துக்கு விற்ப னையாகியுள்ளது. தொடர்ந்து புத்தகத் திருவிழாவில் சிறப்பாக பணியாற்றிய பல்வேறு துறை களைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப் பட்டது. மாவட்ட காவல்துறை கண்கா ணிப்பாளர் செந்தில்குமார், மாவட்ட வருவாய் அதிகாரி மணி வண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்கு னர் சிவராமன் ,மாநில ஊரக  வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் வானதி ,கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள் ஊராட்சி மன்ற தலைவர் மணி முத்து சிவகங்கை நகர்மன்ற  தலைவர் துரை ஆனந்த், சிவ கங்கை ஆர்டிஓ முத்துக்கழுவன், மாவட்ட முதன்மை கல்வி அலு வலர் மணிவண்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர், உணவு பாது காப்புத்துறை அலுவலர் பிரபா வதி, பபாசி செயலாளர் முருகன் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள், பத்திரி கையாளர்கள், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நாகராஜன் பூபதி, உதவி அலுவலர் ராஜ செல்வன் ஆகியோருக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பாராட்டு சான்றி தழ் வழங்கினார்.