தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் கம்பத்தில் அராபத் உமர் எழுதிய , “நசீபு” நூல் வெளியீட்டு விழா கம்பத்தில் நடைபெற்றது. பூமணம் இராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாநிலப் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா, “நசீபு” நூலை அறிமுகம் செய்து பேசினார். மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் ம. காமுத்துரை, அ.உமர் பாருக், மாவட்டச் செயலாளர் அய்.தமிழ்மணி, மாவட்டப் பொருளாளர் யாழ் தன்விகா, மாநிலத் துணைச் செயலாளர் அ.கரீம், மாநிலக்குழு உறுப்பினர்கள் ராஜிலா ரிஜ்வான், சுருளிப்பட்டி சிவாஜி. நூலாசிரியர் மு.அராபத், சேஅருண்குமார். கே.பி.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.