மானாமதுரை, மார்ச் 17- அனைத்து குழந்தைகளையும் படிக்க வைக்க வேண்டுமென்பதில் சிவகங்கை மாவட்டம் சிறுகுடி ஊராட்சி சிறப்பாக செயல் படுவதாக ஊராட்சி மன்றத்தலைவி பஞ்ச வர்ணம் தெரிவித்தார். மக்கள் தொகையில் சரிபாதியாக இருக்கிற பெண்கள் முன்னேற்றத்தில் தமி ழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை யில் ஆட்சி நடைபெறுகிறது. பெண்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளித்தி ருக்கிறார். குழந்தைகளுக்கு எதிரான எந்த செயலும் எங்கள் ஊராட்சிப் பகுதியில் நடை பெறவில்லை .அனைத்து குழந்தைகளும் பள்ளி செல்கிறார்கள். குழந்தைகள் தொடர்பான நிகழ்வுகளில் பெற்றோர்கள் கவனமுடன் இருக்க வேண்டுமென்றார். நிகழ்வில் குழந்தைகள் நல மாவட்ட நலக் குழு உறுப்பினர் சத்தியமூர்த்தி, குழந்தை நலக் குழு காவலர்கள்,கிராம நிர்வாக அலு வலர் மூக்கு பாண்டியம்மாள், மக்கள் நலப் பணியாளர் தெய்வமணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.