மதுரை, ஜூலை 16- மதுரை உத்தங்குடி வளர்நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (47). இவர் உகாண்டா நாட்டில் எம்.பவர் ஆயில் கம்பெனியில் 10 ஆண்டுகளாக பணி யாற்றி வந்தார். இந்நிலை யில் அவரது குடும்பத்தினரால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. நிறு வனத்தை அவரது மனைவி பாமினி தொடர்பு கொண்ட போது அவர் செலுத்த வேண்டிய. ரூ. 1,55,000- அனுப்பினால் தான் அவரை ஊருக்கு அனுப்புவதாக தெரிவித்த னர். அந்த பணமும் 01-06-2023 அன்று இங்கி ருந்து அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் ஒரே ஒரு முறை மட்டுமே தொலைபேசியில் தொடர்பு கொள்ள அனுமதித்த நிலையில் ராமச்சந்திரன், தன்னை தனி அறையில் கட்டி போட்டு துன்புறுத்துவதாக தெரி வித்துள்ளார். இந்த தகவல் பிரவசி சட்ட மையம் (PRAVAASI LEGAL CELL) ஆப்பிரிக்க ஒருங்கி ணைப்பாளர் ஆர். எம். பாபுவிடம் தெரி விக்கப்பட்டுள்து. அந்த நிறுவன உரிமை யாளரிடம் தொலைபேசி, மின்னஞ்சல் வாயி லாக தொடர்பு கொண்டதில் சரி வர பதில் கிடைக்கவில்லை. இந்த நிலையில் உகாண்டாவில் உள்ள பல்வேறு அமைப்புகள் மூலம் தேடி விசா ரித்ததில் அந்த நிறுவனத்தை சார்ந்த உரிமை யாளர் தீபக், அவரை கடுமையாக தாக்கிய தும், மருத்துவமனையில் சேர்த்துள்ளதும் தெரியவந்தது. உகாண்டா தமிழ்ச்சங்கம், உகாண்டா இந்திய சங்கம்,
இந்திய தூதரகம் உகாண்டா, மதுரை மாவட்ட ஆட்சியர் என்று அனைவருக்கும் புகார்கள் அளிக் கப்பட்டன. அவர்களின் தலையீட்டின் பேரில் ராமச்சந்திரனுக்கு மருத்துவமனை யில் உரிய சிகிச்சை கொடுக்கவும் அதற் கான பணத்தை அவர் பணியாற்றிய நிறு வனம் செலுத்துவதாகவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் நிறுவனம் பணம் செலுத்தாத காரணத்தால் அவரை உகாண்டா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கே சிகிச்சை பெற்ற நிலையில், 11-07-2023 அன்று இறந்துவிட்ட தகவல் கிடைத்தது. அவரது உடலை மதுரைக்கு கொண்டு வருவதற்கு உதவிடக் கோரி மதுரை ஆட்சி யர், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் ஆகியோரிடம் மனு அளிக் கப்பட்டது. பின்னர் உகாண்டா தமிழ்ச் சங்கம், உகண்டா இந்திய தூதரகம், பிரவசி சட்ட மையம் மற்றும் ஆட்சியர், நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகி யோர் முயற்சியில் சனிக்கிழமை காலை அவரது உடல் மும்பை கொண்டு வரப் பட்டது.பின்னர் அங்கிருந்து மதுரைக்கு ஞாயிறன்று மதியம் மதுரை கொண்டு வரப்பட்டது . இச்சம்பவம் குறித்து இந்திய அரசும், மாநில அரசும் தலையிட்டு அந்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலி யுறுத்தப்பட்டுள்ளது.