தேனி ,ஜூன்.13- தேனி மாவட்டம், தேவாரத்தை சேர்ந்த ரமேஷ் -மணிமாலா தம்பதியினர் . இவர்களுக்கி டையே விவாகரத்து தொடரப்பட்டு இருவருக்கும் இடையே விவாகரத்து வழங்கப்பட்டது . இந்த விவா கரத்து வழக்கில் மணிமாலா தனது கணவர் ரமேஷிடம் ஜீவனாம்சம் கேட்டு நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். இந்நிலையில் திங்களன்று வழக்கு தொடர் பாக போடி நீதிமன்றத்தில் ஆஜரான மணிமாலா சுமார் இரண்டு மணி அளவில் நீதிமன்றத்தில் இருந்து போடி பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்த பொழுது நீதிமன்ற வளா கம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் நடந்து கொண்டிருந்த மணிமாலாவின் மீது மோதியது. இதில் முன் பகுதி சக்கரத்தின் இடையே சிக்கிக் கொண்ட மணிமாலா பலத்த காயமடைந்தார். பொதுமக்கள் இந்த அதிர்ச்சியான சம்ப வத்தை கண்டு உடனடியாக கார் ஓட்டி வந்த ஓட்டு நர் பாண்டித்துரையை பிடித்து காவல்துறை வசம் ஒப்படைத்தனர். மேலும் இந்த கொலை முயற்சி தொடர்பாக மணிமாலாவின் கணவர் ரமேஷை போடி டிஎஸ்பி பெரியசாமி தலைமையிலான காவல் சிறப்புப்படை அமைத்து தேடி வந்தனர். விபத்து நடந்த சுமார் 2 மணி நேரத்தில் போலீசார் ரமேஷை கைது செய்தனர். விசாரணையில் கணவர் ரமேஷ் இரண்டா வது முறையாக கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. ஏற்கனவே ஒரு முறை பைக்கில் மணிமாலாவை ஏற்றி கொலை முயற்சி செய்ய திட்டமிட்டு தோல்வி அடைந்ததாகவும் இரண்டா வது முறையாக நீதிமன்றத்திற்கு வந்த மணி மாலாவை ரமேஷ் தனது நண்பர் பாண்டித்துரை யை வைத்து காரில் மோதி கொலை செய்ய முயன்றது தெரியவந்தது .