districts

img

படகு சவாரி துவக்க விழா

தென்காசி, ஜூலை 10- ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்டமாக இருந்த பொழுது சுற்றுலா தலமான குற்றாலத்தில் படகு குளாம்  துவக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் கட்டணம் செலுத்தி படகு சவாரி செய்து வந்தனர்.  இந்நிலையில் கொரோனா காரணமாக கடந்த  இரண்டு ஆண்டுகளாக படகு சவாரி நிறுத்தப்பட்டிருந் தது. மேலும் திருநெல்வேலி மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு தென்காசி மாவட்டமாக பிரிந்த பின் படகு  சவாரி ஞாயிற்றுக்கிழமை அன்று துவங்கியது. இந்நிகழ்ச்  சிக்கு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமை தாங்கி னார். தென்காசி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனி  நாடார் முன்னிலை வகித்தார்.  நான்கு வகையான படகு சவாரிகள் உள்ளன .இரு நபர் மிதிபடகு, நான்கு நபர் மிதி படகு, நான்கு நபர் துடுப்பு படகு, தனி நபர் படகு என நான்கு வகையான படகு சவாரிகள் உள்ளன. இரு நபர் மிதிபடகு சவாரிக்கு  கட்டணம் ரூபாய் 150, நான்கு நபர் மிதி படகு சவாரிக்கு  கட்டணம் ரூபாய் 200 ,நான்கு நபர் துடுப்பு படகு கட்ட ணம் ரூபாய் 250, தனி நபர் படகு ரூபாய் 150 என கட்ட ணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் படகு  சவாரியை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வா கத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.  படகு சவாரி துவக்க நிகழ்வில் குற்றாலம் தமிழ்நாடு  சுற்றுலா வளர்ச்சி கழகம் மண்டல மேலாளர் டேவிட் பிரபாகர், மேலாளர் ராஜேஸ்வரி, பொறியாளர் சீனி வாசன் மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.