சின்னாளபட்டி, ஏப்.8- திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் மற்றும் திண்டுக்கல் செஞ்சிலுவை சங்கத்தினர் இணைந்து சின்னாளபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இரத்தம் கொடுக்கும் விதமாக ரத்த தான முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பல்கலை கழக துணைவேந்தர் (பொறுப்பு) ரங்கராஜன் தலைமை தாங்கினார். பதிவாளர் வி.பி.ஆர்.சிவக்குமார் முன்னிலை வகித்தார். ஆத்தூர் ஒன்றிய வட்டார மருத்துவ அலுவலர் சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.