மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் பாஜகவின் எம்.பி பிரிஜ்பூஷன் சரண்சிங்கை கைது செய்ய வலியுறுத்தி வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், மாதர் சங்கம், மாற்றுத் திறனாளிகள் சங்கம் சார்பில் சாத்தூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாலிபர் சங்க வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.ஜெயபாரத், சாத்தூர் நகர் செயலாளர் முத்துகணேஷ், மாவட்டத் தலைவர் கருப்பசாமி, மாணவர் சங்க மாவட்டத் தலைவர் பால்பாண்டி, மாற்றுத் திறனாளிகள் சங்க நகர் பொருளாளர் சீனிவாசன், பெத்துராஜ் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.