மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் மதுரை, செப்.18- “பேச்சு கிடையாது... வீச்சுதான்...” என போஸ்டர் வெளியிட்டு வன்முறையைத் தூண்டும் பாஜக-வின் நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது, இது குறித்து கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன் திங்க ளன்று விடுத்துள்ள அறிக்கை:- மதுரையில் பல்வேறு இடங்களில் பாஜகவினர் சுவரொட்டிகளை ஒட்டி யுள்ளனர். அந்த சுவரொட்டியில் “ ....ஒரு அளவுக்கு மேல் நம்மகிட்ட பேச்சு கிடை யாது வீச்சுதான்...” என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளது. இந்தச் சுவரொட்டி யை பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரி வின் மாநிலச் செயலாளர் ஆர் விஷ்ணு பிரசாத் வெளியிட்டுள்ளார். இந்தச் சுவெராட்டி இந்தியப் பிரத மர் மோடி, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் படங்களு டன் இடம் பெற்றுள்ளது. அரசியல் தளத்தில் மத நல்லிணக்கம், மக்கள் ஒற்றுமையை முன்னிறுத்துவோடு, அதற்காக மதுரை மக்கள் தொடர்ந்து குர லெழுப்பி வருகிறார்கள். தமிழகத்தில் மக்கள் ஒற்றுமையும் மத நல்லிணக்கமும் பாதுகாக்கப்பட்டு வரும் சூழலில் அதைச் சீர்குலைக்கும் வகையிலும் வன்முறை யைத் தூண்டும் வகையிலும் இந்தச் சுவ ரொட்டி வெளியிடப்பட்டுள்ளது கண்டிக்கத் தக்கது. ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோதச் செயல்பாடுகளை விமர்சிக்கும் அரசியல் கட்சிகளை வகையில், மிரட்டும் வகையில், ஜனநாயக சக்திகளை அச்சுறுத்தம் சுவ ரொட்டி வெளியிடப்பட்டுள்ளது. இதை வெளியிட்ட நபர்கள் மீது மதுரை மாநகர் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தச் சுவரொட்டி வெளியிட்ட தற்காக பாஜக தலைமை வருத்தம் தெரி விக்க வேண்டும். மேலும், இத்தகைய வன்முறை யாளர்களை அரசியல் களத்திலிருந்து அப்புறப்படுத்தி, ஜனநாயகம் காக்க மதுரை மக்கள் முன்வர வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பி டப்பட்டுள்ளது.