அருப்புக்கோட்டை, ஜூன் 12- அருப்புக்கோட்டையில் மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் கைதாகியுள்ள தனியார் நர்சிங் கல்லூரி தாளாளரும் பாஜக நிர்வாகியுமான தாஸ்வின் ஜான் கிரேசுக்கு வரும் ஜூன் 24 வரை சிறையில் இருக்க வேண்டு மென நீதிபதி உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் மாவட்டம், அருப்புக் கோட்டை தெற்கு தெருவில் தனியார் நர்சிங் கல்லூரி உள்ளது. இதில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு கழிப்பறை உள் ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை. இக்கல்லூரியின் தாளாளராக இருந்து வருபவர் பாஜக சிறுபான்மை பிரிவு முன்னாள் மாவட்டத் தலைவர் தாஸ்வின் ஜான் கிரேஸ். இவர் அங்கு படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவருக்கு அடிக்கடி பாலியல் ரீதி யான தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும், கைப்பேசி மூலம் ஆபாச படங்க ளையும் அனுப்பியுள்ளார். இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மாணவி, சக மாணவிகளி டம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அனைத்து மாணவி களும் ஒன்றுசேர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு, காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மாணவிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து, பாஜக நிர்வாகி தாஸ்வின் ஜான் கிரேஸ் கைது செய்யப்பட்டார். பின்பு, போலீசார் அவரை திருவில்லி புத்தூரில் உள்ள தீண்டாமை வன் கொடுமை தடுப்பு சட்ட நீதிபதி கோபிநாத் முன்பு ஆஜர்படுத்தினர். இதையடுத்து, தாஸ்வின்ஜான்கிரேசை வரும் ஜூன் 24 வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்த ரவிட்டார். பின்பு போலீசார் அவரை விருதுநகர் மத்திய சிறையில் அடைத்த னர்.