பாஜக நிர்வாகி எச்.ராஜா கைது
பழனி, மே 18- பழனியில் இடும்பன் கோவில் பகுதியில் மகா சங்கமம் ஆரத்தி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்வில் கலந்துகொள்ள பாஜக நிர்வாகி எச்.ராஜா மே 18 அன்று வந்தார். இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி இல்லாததால் பழனி உட்கோட்ட காவல் எல்லை பகுதியான சத்திரப்பட்டி யில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனி வாசன் தலைமையிலான காவல்துறையினர் எச். ராஜாவை கைது செய்தனர்.
முதியவர் வெட்டிக்கொலை
சின்னாளபட்டி, மே 18- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட சித்தரேவு ஊராட்சி அமைதி பூங்காவை சேர்ந்தவர் சடை யாண்டி. இவர் இரவு நேரத்தில் அமைதி பூங்கா பகுதியில் உள்ள வத்தலகுண்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட வனத் துறைக்கு சொந்தமான கட்டிடத்தில் சடையாண்டி தினமும் இரவு தூங்குவது வழக்கம். இந்நிலையில் செவ்வாயன்று இரவு வனத்துறை கட்டிடத்தில் தூங்கச் செல்வதாக கூறி அங்கு சென்றுள்ளார். புதனன்று காலை வெகு நேரம் ஆகி யும் சடையாண்டி வீட்டிற்கு வராததால் உறவினர்கள் வனத்துறை கட்டிடத்தில் சென்று பார்த்தபோது சடை யாண்டி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்.
நாளை சிவகங்கையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
சிவகங்கை, மே 18- சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் மதுசூதனன் ரெட்டி தலைமையில் மே 20-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி அளவில் நடை பெற உள்ளது. இக்கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் பங்கேற்கிறார்கள். அனைத்து பகுதிகளி லும் உள்ள விவசாய பெருமக்கள் கலந்துகொண்டு விவ சாயம் சார்ந்த குறைகளை தெரிவித்து அதனை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.1.36 கோடி இடம் மீட்பு
மதுரை, மே 17- மதுரை சிம்மக்கல் அனுமார்கோவில் படித்துறை அருகே மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 1366 சதுர அடி பரப்பளவு கொண்ட கட்டிடத்தை வணிக பயன்பாட்டிற்காக குணசேகரன் என்பவருக்கு கோயில் நிர்வாகம் சார்பாக வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த இடத்தை புதனன்று அதிகாரிகள் ஆய்வு செய்த போது, கோயில் இடத்தை சட்டவிரோதமாக ராஜேந்திரன் பயன் படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த இடத்தை இரண்டு பகுதிகளாக பிரித்து கழிப்பறை, குளியலறை கட்டணம் வசூல் செய்தும், உணவகம் அமைத்தும் நடத்தி வந்துள்ளனர். இதனையடுத்து அந்த இடத்திற்கு செலுத்த வேண்டிய வரி பாக்கி 3 லட்சத்து 91ஆயிரத்து 768 ரூபாயை செலுத்தக் கோரி கோயில் நிர்வாகத்தின் சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வணிக பயன்பாட்டிற்கு உள்வாடகைக்கு விட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற கோயில் அதிகாரிகள் 1 கோடியே 36 லட்சம் மதிப்பிலான 1366 சதுர அடி பரப்பளவு கொண்ட இடத்தை மீட்டனர். மேலும் அந்த கடை களுக்கு சீல் வைத்து அங்கு உள்ள அறையில் இருந்த ஒரு அடி நீள பித்தளை சூலம், கையடக்க கலசம், விபூதி கொப்பரை ஆகியவற்றை மீட்டுச் சென்றனர்.
ஊராட்சி தலைவரிடம் லஞ்சம் வாங்கிய பொறியாளர் கைது
சிவகங்கை மே 18 சிவகங்கை மாவட்டம் கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியம் தேரளப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியனிடம் லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளர் திருமாறன் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன் ஊராட்சிக்கு புதிதாக சாலை அமைப்பதற்கு கண்ணங்குடி ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் திருமாறன் ரூ.7 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அவர் பணம் கொடுக்கும் போது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் பொறியாளர் திருமாறன் கைது செய்யப்பட்டார்.
மதுரைக்கு குழாய் மூலம் தண்ணீர் லோயர்கேம்ப்பில் தடுப்பணை கட்டுமான பணி துவக்கம்
தேனி, மே 18- லோயர்கேம்பிலிருந்து மதுரைக்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்திற்காக தடுப்பணை கட்டுமானப் பணிக்கான துவக்க நிகழ்ச்சி புதன் கிழமை நடைபெற்றது. தேனி மாவட்டம், கூட லூர் அருகே உள்ள லோயர் கேம்ப்பில் இருந்து ரூ. 1296 கோடி மதிப்பில் மதுரைக்கு தண்ணீர் கொண்டு செல்லும் கூட்டுக் குடிநீர் திட்டத்திற் கான தடுப்பணை கட்ட, கூட லூர் குருவனூத்து பகுதியில் உள்ள சலவைத் தொழிலா ளர் கூடம் அருகே பொதுப் பணித்துறையினர் இடம் தேர்வு செய்தனர். தடுப்பணை கட்டி தண்ணீரை குழாய் மூலம் கொண்டு சென்றால் தேனி மாவட்ட விவசாயம் பாதிக்கும், மேலும் தடுப் பணை கட்டும் இடத்தில் சல வைத்தொழிலாளர்களின் கூடம் உள்ளதால், அவர் களது தொழில் பாதிக்கப் படும் என்றும் இத்திட்டத் திற்கு கூடலூர் சலவைத் தொழிலாளர்கள் மற்றும் விவ சாய சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திவந்தனர். கடந்தவாரம் இப்பகுதியில் பணிகள் செய்யவந்த வாகனங்களை மறித்து மறியலில் ஈடுபட்ட சலவை தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர். துவக்க பணி இந்நிலையில் குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்திற்காக தடுப்பணை கட்டுவதற்கான பூமிபூஜை குருவனூற்று பாலம் வண்ணான்துறை அருகே நடைபெற்றது. நிகழ்ச்சியில் பெரியாறு வைகை மதுரைக்கோட்ட கண்காணிப்பு பொறியாளர் சுகுமார், மதுரை மாநக ராட்சி பொறியாளர் அரசு, செயற்பொறியாளர் பாக்கிய லட்சுமி, பெரியாறு வைகை நீர்வள ஆதாரஅமைப்பு செயற்பொறியாளர் அன்புச் செல்வன் உட்பட அதிகாரி கள் கலந்து கொண்டு புதிய தடுப்பணைக்கான பணியை தொடங்கி வைத்தனர். அதி காரிகள் வரும் வழியில் விவ சாயிகள் எதிர்ப்பு தெரிவித்த னர். கடும் போலீஸ் பாது காப்பு போடப்பட்டிருந்தது.
மனநலம் பாதித்த பெண் கொலை வழக்கில் சிறுவன் உட்பட 2 பேர் கைது
தேனி, மே 18- தேனி மாவட்டம், கூடலூ ரில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மர்மமான முறையில் இறந்துகிடந்த சம்பவத்தில், பாலியல் பலாத்காரம் செய்து அப்பெண்ணை கொலை செய்த 17 வயது சிறுவன் உட் பட இருவரை காவல்துறை யினர் கைது செய்தனர். கூடலூர் - குள்ளப்ப கவுண்டன்பட்டி சாலையில் உள்ள நியாய விலைக் கடை அருகே கடந்த திங்கட்கிழமை 50 வயது மதிக்கத்தக்க மன நலம் பாதிக்கப்பட்ட மயில் என்ற பெண் அரை நிர்வாண மாக இறந்து கிடந்தார். அவ ரது தலை மற்றும் உடம்பில் காயங்கள் இருந்ததால் இது கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில், உத்தம பாளையம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா தலைமையில், தனிப் படை அமைத்து தேடி வந்த னர். இதையடுத்து தனிப் படை போலீசார், அப்பகுதி யில் இருந்த சிசிடிவி கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட குற்றவாளி களை தேடினர். இந்நிலையில் திங்க ளன்று மாலை தனிப்படை யினர் கூடலூர் ஒட்டான் குளம் கண்மாய் கரையில் மது அருந்திக் கொண்டிருந்த குற்றவாளிகளை பிடித்தனர். விசாரணையில் அவர்கள் கூடலூரைச் சேர்ந்த முருகன் மகன் அரவிந்குமார் (25), மற் றும் கூடலூரைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் என்ப தும், இருவரும் ஒன்றாக கட் டிட வேலைக்கு செல்பவர் கள், வேலை முடித்து வந்து மது அருந்துவது வழக்கம் என்றும், சம்பவத்தன்று இரு வரும் மது அருந்திவிட்டு போதையில், மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் பலாத் காரம் செய்ய முயன்ற போது, அவர் சத்தம் போட்டதால் அங்கு கிடந்த கம்பால் அவரை தாக்கி, மயங்கி கீழே விழுந்ததும், பலாத்காரம் செய்து அருகே வீசிச் சென் றது தெரியவந்தது. இதை யடுத்து இருவரையும் கைது செய்தனர். பாராட்டு கொலை நடந்த 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடித்த தனிப்படை போலீசாரை, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிர வின் உமேஷ் டோங்கரே பாராட்டினர்.
குண்டர் தடுப்பு சட்டத்தில் இருவர் சிறையில் அடைப்பு
தேனி, மே 18- பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். பெரியகுளம் அழகர்சாமிபுரத்தை சேர்ந்தவர் சின்ன பாண்டி, இ.புதுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்தவர் இஸ்ரேல். இவர்கள் 2 பேரும் தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் வழிப்பறி மற்றும் வீடுகளை உடைத்து திருடுவது உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்ப வங்களில் தொடர்ந்து ஈடுபட்டனர். எனவே தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்ரே பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் குண்டர் தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து 2 பேரை யும் காவல்துறையினர் கைது செய்தனர்.
வீட்டின் கதவை உடைத்து நகை,பணம் கொள்ளை
திருவில்லிபுத்தூர், மே 18- விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் கீழப்பட்டி காளியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் சுப்பிரமணி யன் (வயது 80). இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு சென்னை யில் உள்ள மகன் வீட்டிற்குச் சென்றார். சென்னையில் இருந்து திருவில்லிபுத்தூர் வந்த இவ ரது மகள் மாலதி தந்தை வீட்டுக்கு சென்றுள்ளார்.அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ.10 ஆயி ரம் பணம், ஒரு லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் திருடப்பட்டது அறிந்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து மாலதி அளித்த புகாரின் பேரில் திருவில்லி புத்தூர் நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
பைக்கிலிருந்து தவறி விழுந்து பெண் பலி
கடமலைக்குண்டு, மே 18- தேனி மாவட்டம், வருசநாடு அருகே வைகை நகர் கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன் என்பவரின் மனைவி செல்வி (வயது 45). இவர் செவ்வாய்க்கிழமை மதியம் உறவினர் வீட்டு விசேஷத்திற்காக ஆண்டிபட்டிக்கு சென்றி ருந்தார். விசேஷம் முடிந்து வைகைநகர் கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவருடன் பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். தங்கம்மாள்புரம் கிராமத்தை கடந்து சாலை வளைவில் சென்றுகொண்டிருக்கும் போது செல்வி பைக்கில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்தக் காயமடைந்த செல்வியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே செல்வி உயிரிழந்தார். இது தொடர்பாக கடமலைக்குண்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு: 2 பேர் சஸ்பெண்ட்
சிவகங்கை, மே 18- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் கீழப்பசலை தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தில் நகை கடன் தள்ளுபடியில் நடைபெற்ற முறைகேடு தொடர் பாக இருவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கீழப்பசலை தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தில் நகை கடன் போலியான நபர்கள் பெயரில் வைத்து அதை தள்ளுபடி கணக்கில் கொண்டு வந்திருக்கிறார்கள். இதுதொடர்பாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். அதா வது 300 நபர்கள் நகை அடமான கடன் பெற்று இருக்கி றார்கள். இதில் 197 நபர்களுக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி என்று பட்டியல் ஒட்டப்பட்டிருக்கிறது. நகையை அடமானம் வைத்து கடன் பெற்ற மற்றவர்கள் நகையை திருப்புவதற்கு விபரம் கேட்க வந்தால் வங்கியை பூட்டிவிட்டு சென்று விடுவதாக தெரியவருகிறது. தினம்தோறும் நகையை அடமானம் வைத்து நகையைத் திருப்ப முடியாது அவர்கள் காத்துக் கிடக்கின்றனர். இதுதொடர்பாக வங்கியின் செயலாளரும் கணினி ஆபரேட்டரும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள தாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக முழு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மானாமதுரை ஒன்றியச் செயலா ளர் ஆண்டி வலியுறுத்தியுள்ளார்.