தேனி, மே 4- ஆண்டிபட்டி அருகே உள்ள மறவபட்டியில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் சாக்க டையில் நனைத்த துடைப்பத்தை கொண்டு ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் வினோத நிகழ்ச்சி நடைபெற்றது. தேனி மாவட்டம், ஆண்டி பட்டி அருகே உள்ள மறவபட்டி கிராமத்தில் முத்தாலம்மன் கோவிலின் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவின் கடைசி நாளில் அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் ஒரு வருக்கொருவர் துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் வினோத மான நிகழ்ச்சி பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகிறது. அடிப்ப தற்கு முன்பாக துடைப்பத்தை சாக்கடை நீரிலும், சேறு மற்றும் சகதியில் நனைத்துக் கொண்டு மாமன், மைத்துனர்கள் மீது ஒரு வருக்கு ஒருவர் அடித்துக்கொண் டனர். மேலும் சிலர் சேற்றிலும், சகதியிலும் படுத்துக்கொண்டு தங்கள் உறவினர்களிடம் துடைப்பத்தால் அடிவாங்கி கொண்டனர். வினோதமான இந்த திருவிழாவை சுற்றுவட் டார கிராமங்களை சேர்ந்த மக் கள் திரண்டு வந்து வேடிக்கை பார்த்தனர். துடைப்பத்தை சாக்க டையில் நனைத்து தாக்கிக்கொள் வதால் குடும்பத்தில் சந்தோஷம் நிலவும் என்றும் அப்பகுதி மக் கள் நம்புகின்றனர். மேலும் நீண்டநாள் பிரிந்து வாழும் உறவு கள் திருவிழாவின் போது துடைப் பத்தால் அடித்துக்கொள்வதால் அவர்களுக்கிடையே மீண்டும் உறவு வளரும் என்றும் கூறு கின்றனர்.