districts

img

மாநில அளவிலான கடற்கரை விளையாட்டு போட்டிகள்

தூத்துக்குடி, ஏப்.3-  தருவை கடற்கரை பகுதியில் மாநில அளவிலான கடற்கரை விளை யாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சி யர் செந்தில்ராஜ், தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் தருவை கடற்கரை பகுதியில் மாநில அளவி லான கடற்கரை விளையாட்டு போட்டி களை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப் பினர் எம்.சி.சண்முகையா முன்னிலை யில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தொடங்கி வைத்து பேசியதாவது:  கடலோர பகுதிகளில் உள்ள விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து அவர்களுக்குப் போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தருவதற்காக கடலோரப் பகுதிகளில் கடற்கரை விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் கால்பந்து, கபடி மற்றும் கையுந்து பந்து ஆகிய விளையாட்டுகளுக்கு மாவட்டம் மற்றும் மாநில அளவில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

ஆண்/ பெண் என இருபாலருக்கும் மாவட்ட அளவி லான போட்டிகள் இராமநாதபுரம், நாகப்பட்டினம், கடலூர், கன்னியா குமரி, தூத்துக்குடி, சென்னை, தஞ்சா வூர், திருவாரூர், புதுக்கோட்டை மற் றும் காஞ்சிபுரம் ஆகிய 10 மாவட்டங் களில் நடத்தப்படுகின்றன. அதன்படி 2021-22ஆம் ஆண்டிற் கான தமிழ்நாடு விளையாட்டு மேம் பாட்டு ஆணையத்தின் வாயிலாக கடந்த 26.02.2022 அன்று மாவட்ட அளவிலான கடற்கரை விளையாட்டு போட்டி கள் தூத்துக்குடி மாவட்டம் தரு வைக்குளம் கடற்கரையில் நடைபெற் றது. மாவட்ட அளவில் வெற்றி பெற்ற அணிகளுக்கு மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் 02.04.2022, 03.04.2022 ஆகிய நாட்கள் தரு வைக்குளம் கடற்கரையில் வைத்து நடைபெறுகிறது. இதில் 10 மாவட்டங்க ளில் இருந்து வீரர், வீராங்கனைகள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளார்கள். கடற்கரை கால் பந்து விளையாட்டில் 5 வீரர்களும், கடற்கரை கபாடி போட்டியில் 6 வீரர் களும், கடற்கரை கையுந்துப் போட்டி யில் 2 வீரர்களும் கலந்துகொண்டுள்ள னர்.  

மாநில அளவிலான கடற்கரை விளையாட்டு போட்டியில் முதலிடம் பெறுபவர்களுக்கு ரூ.3000, இரண் டாம் இடம் பெறுபவர்களுக்கு ரூ. 2000, மூன்றாமிடம் பெறுபவர்களுக்கு ரூ.1000 வழங்கப்பட உள்ளது. தூத் துக்குடி தருவை மைதானத்தில் 26ம் தேதி போட்டிகள் நடத்தப்பட்டு வீரர் கள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ் நாடு முழுவதும் இருந்து வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த போட்டியில் கைப்பந்து, கால்பந்து, கபடிஆகிய 3 போட்டிகளில் 300க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். போட்டிகளில் அனைவரும் வெற்றி பெற விரும்புகிறேன். போட்டிகளில் வெற்றி பெறுவதைவிட கலந்துகொள் வதுதான் முக்கியமானது. தருவை குளம் தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு அழகிய கடற்கரை உள்ள கிராமம்.  இங்குள்ள கடல் அமைதியாக இருப் பது மாதிரி இங்குள்ள மக்களும் அமை தியானவர்கள். தூத்துக்குடி மாவட் டத்தில் முன்னோடி மீனவர்கள் தரு வைகுளத்தை சேர்ந்தவர்கள். விளை யாட்டு வீரர்களுக்கு அதிக வாய்ப்பு கள் இருக்கிறது.  தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் எங்கு சென்றாலும் சிறப்பாக செயல் படுவார்கள். காலையில் எழுந்தவுடன் முதல் 20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

இதன்வாயிலாக உடலும், உள்ளமும் சுறுசுறுப்பாக இயங்கும். அன்றாடம் உடற்பயிற்சி செய்வதினால் நாம் ஈடுபடும் பணி களில் உற்சாகத்துடன் செயல்பட முடி யும். விளையாட்டு வீரர்களுக்கு அனை த்து துறைகளிலும் வேலைவாய்ப் புக்கு முன்னுரிமை அளிக்கப்படு கிறது. எனவே நீங்கள் நல்ல முறை யில் விளையாடி வெற்றி பெற்று அரசு வழங்கும் இட ஒதுக்கீடு வேலைவாய்ப் பினை பெறுவதோடு தொடர்ந்து விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு மாவட்டத்திற்கும், மாநி லத்திற்கும் பெருமை சேர்க்க வேண் டும். உங்களுக்கு மாவட்ட நிர்வாகம் துணையாக இருக்கும் என பேசி னார். நிகழ்ச்சியில் கோவில்பட்டி வரு வாய் கோட்டாட்சியர் சங்காநாரா யணன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர்கள் டி.வி.பேட்ரிக் (தூத்துக்குடி), அண்டனி அதிஷ்டராஜ், (தஞ்சாவூர்), தருவை குளம் ஊராட்சி மன்ற உறுப்பினர் காடோடி, ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் நிஷாந்தினி, கூடைப்பந்து பயிற்றுநர்  ஜெயரத்தினராஜ், கால்பந்து பயிற்று நர் நடராஜ்முருகன், ஸ்குவாஸ் பயிற்றுவர் புஷ்பராஜ் பயஸ் ஆசீர்  மற்றும் பயிற்றுநர்கள், மாணவ, மாண விகள், வீரர்கள் கலந்துகொண்டனர்.