districts

img

மதுரையில் மெட்ரோ ரயில் திட்ட அடிப்படைப் பணிகள் தொடக்கம்

மதுரை, ஏப்.17- ரூ.8,500 கோடி மதிப்பிலான மதுரை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் 2024-ஆம் ஆண்டு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணியைத் தொடங்குவதற்கான அடிப்படைப் பணியான  மண் பரிசோதனை திருப்ப ரங்குன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு  முன்  தொடங்கிவிட்டது. இது குறித்து திட்ட இயக்குநர் டி.அர்ச்சுணன் கூறிய தாவது:  மேலும் பரிசோதனை பணி  தொடங்கியுள்ளது. மண் பரிசோத னைக்கென கூடுதல் இயந்திரங்கள் வர வுள்ளது. குறிப்பிட்ட இந்தப் பணியை முடிக்க கிட்டத்தட்ட இரண்டு மாதம் ஆகும்.  மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி யை மேற்கொள்பவர்கள், பூமிக்கடியில் மூன்று முதல் நான்கு இடங்களில் மண் பரிசோதனை மேற்கொள்ளவர். பாலங்கள் கட்டப் படும் இடங்களில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் குறைந்தது இரண்டு இடங்களில் மண் பரிசோதனை மேற் கொள்வர். மண்ணின் மென்மை, கடினத் தன்மையைப் பொறுத்தே பொறி யாளர்கள் திட்டத்தின் வடிவமைப் பைத் தீர்மானிப்பார் பூமிக்கடியில் கொண்டு செல்வதை விட பாலங்கள் அமைப்பது எளிதாக இருக்கும். மண் ணின் தன்மையே திட்டத்தின் இறுதிச் செலவை தீர்மானிக்கும் மதுரை நகரின் வரலாற்றுத் தொன்மையையும் கட்டடங்களை பாது காக்கும் வகையில் மெட்ரோ ரயில் கோரிப்பாளையம் மற்றும் வசந்தநகர் இடையே பூமிக்கடியில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  தண்டவாளங்கள் சாலை மட்டத்திலி ருந்து 15 மீட்டர் உயரத்தில் இருக்கும். பூமிக்கடியில் 18 முதல் 20 மீட்டர் ஆழத்  தில் தண்டவாளங்கள் அமைக்கப் படும்.  மதுரை யா.ஒத்தக்கடையிலிருந்து திருமங்கலம் வரை 31 கி.மீ., துரத்திற்கு மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.  பூமிக்கடியில் ஐந்து கிலோமீட்டர் களும், 26 கி.மீ பூமியின் மேற்பகுதி யிலும் அமைக்கப்படுகிறது.  மெட்ரோ ரயில் திட்டப் பணி   2027-  ஆம் ஆண்டு நிறைவடையும் என்று எதிர்  பார்க்கப்படுகிறது என்றார்.