districts

img

தேனி மாவட்டத்தில் சிஐடியு, விவசாயிகள் சங்கம் நடைபயண பிரச்சாரம்

தேனி, மார்ச் 11- விவசாய விளைபொருட் களுக்கு ஒன்றரை மடங்கு ஆதார  விலை தருவதாக ஒன்றிய அரசு அளித்த உறுதிமொழியைத் நிறை வேற்ற வேண்டும். தொழிலாளர் களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் ,ஓய்வூதியம் ரூ.10  ஆயிரம் வழங்க வேண்டும். ஒப்பந்த முறை ஒழிக்கப்பட்டு ஒப்பந்த ஊழி யர்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும். பொதுத்துறையை தனி யார்மயமாக்கும் மக்கள் விரோத செயலை நிறுத்த வேண்டும் என்று  வலியுறுத்தி ஏப்ரல் 5 தில்லி நாடா ளுமன்றம் நோக்கி விவசாயிகள் ,தொழிலாளர்கள் பேரணி நடை பெறுகிறது. இந்த பேரணியை விளக்கி சிஐ டியு, தமிழ்நாடு விவசாயிகள் சங்  கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில்  தேனி மாவட்டத்தின் பல்வேறு பகு திகளில் பிரச்சாரம் நடைபெற்றது.

பெரியகுளம் 

பெரியகுளம் வட்டத்தில் டி. கள்ளிப்பட்டியில் துவங்கிய நடை பயண பிரச்சார இயக்கத்தை கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினரும் ,முன்னாள் பெரியகுளம் சட்டமன்ற  உறுப்பினருமான ஏ.லாசர் துவக்கி  வைத்தார். சிஐடியு தாலுகா செயலா ளர் எஸ்.கணேசன், விவசாயிகள்  சங்க தாலுகா செயலாளர் சி. நாகராஜ், விவசாயத்தொழிலாளர் சங்க தாலுகா செயலாளர் எஸ்.செளந்திரபாண்டி ஆகியோர் தலைமை வகித்தனர் .தாமரைக் குளம்,வடுகபட்டி ,மேல்மங்கலம், ஜெயமங்கலம், சில்வார்பட்டி, தேவதானப்பட்டி உள்ளிட்ட கிரா மங்களில் பிரச்சாரம் நடைபெற்றது.  சிஐடியு மாவட்ட செயலாளர் எம். ராமச்சந்திரன், மாதர் சங்க மாவட்ட துணைத் தலைவர் சு.வெண்மணி, சிபிஎம் தாலுகா செயலாளர் எம்.வி. முருகன், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் பி.இளங்கோவன், பிரேம் குமார் உள்ளிட்டோர் பேசினர்.

போடி 

போடி ரெங்கநாதபுரத்தில் நடை பயண பிரச்சாரம் தொடங்கியது.  தருமத்துப்பட்டி, மேலசொக்கநாத புரம், சுந்தரராஜபுரம், சில்ல மரத்துப்பட்டி, சிலமலை, ராசிங்க புரம் உள்ளிட்ட கிராமங்களில் பிரச்சாரம் நடைபெற்றது .விவசாயி கள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.கே.பாண்டியன் ,சிஐடியு தாலுகா செயலாளர் பி.சந்திரசேகர் ,விவ சாயத்தொழிலாளர் சங்க தாலுகா செயலாளர் காமராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். வாலிபர் சங்க தேனி மாவட்ட செயலாளர் சி. முனீஸ்வரன் துவக்கி வைத்தார். சிபிஎம் தாலுகா செயலாளர் எஸ். செல்வம், சிஐடியு அரசு போக்கு வரத்து தொழிற்சங்க துணை பொதுச் செயலாளர் கணேஷ்ராம், நாகராஜ், கே.செல்வராஜ், மூக் கையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விவசாயிகள் சங்க  மாநிலக்குழு உறுப்பினர் கே.ராஜப்  பன் நிறைவு செய்து பேசினார்.

பாளையம் 
பாளையம், கோம்பை பேரூ ராட்சி பகுதியில்  10 க்கும் மேற்பட்ட  இடங்களில் நடைபெற்ற பிரச்சார  இயக்கத்திற்கு சிஐடியு தாலுகா  செயலாளர் டி.கே.சீனிவாசன், விவ சாயிகள் சங்க செயலாளர் எஸ். லட்சுமணன், விவசாயத்தொழி லாளர் சங்க  செயலாளர் தங்கமாயி ஆகியோர் தலைமை வகித்தனர்.  சிஐடியு மாவட்ட பொருளாளர்  ஜி.சண்முகம், விவசாயத்தொழிலா ளர் சங்க மாவட்டச்  செயலாளர் எல்.ஆர்.சங்கரசுப்பு ,சிபிஎம் ஏரியா  செயலாளர் எஸ்.சஞ்சீவிகுமார், மாவட்டக்குழு உறுப்பினர் சி.மு.இப்ராகிம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

ஆண்டிபட்டி 

ஆண்டிபட்டி ஒன்றியம் ஏத்தக்கோவிலில் துவங்கிய நடை பயண பிரச்சாரத்தை கட்சியின் தேனி மாவட்ட செயலாளர் ஏ.வி. அண்ணாமலை துவக்கி வைத்தார்.  மேக்கிழார்பட்டி, அனுப்பபட்டி, போடிதாசன்பட்டி, மறவப்பட்டி, ஆண்டிபட்டி, ஜக்கம்பட்டி உள் ளிட்ட கிராமங்களில் பிரச்சாரம் நடைபெற்றது. சிஐடியு தலைவர் எஸ்.ராமர், விவசாயிகள் சங்க செயலாளர் கே.எஸ்.சந்திரன், விவசாயத்தொழிலாளர் சங்க செயலாளர் எஸ்.அய்யர் ஆகி யோர் தலைமை வகித்தனர். விவ சாயிகள் சங்க மாவட்டச்  செயலா ளர் டி.கண்ணன்,மாவட்ட நிர்வாகி கே.தயாளன், சிபிஎம் ஒன்றிய செய லாளர் மா.தங்கராஜ்,  மா.கணே சன், தங்கவேல் ,பி.ராமன் உள் ளிட்ட பலர் பேசினர். கட்சியின் தேனி மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கே.ஆர்.லெனின் நிறைவுரை யாற்றினார்.