districts

img

வீட்டுமனைப்பட்டா கேட்டு முடிதிருத்துவோர் மனு

மதுரை, டிச.2-  தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர்கள் மத்திய சங்கம் (சிஐடியு) மற்றும் தமிழ்நாடு மருத் துவர் சங்கம் மதுரை மாநகர் தென் பகுதி கிளை சார்பில் தொழிலா ளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கோரி 50-க்கும் மேற்பட் டோர் மாவட்ட ஆட்சியரிடம் திங்க ளன்று சங்கத் தலைவர் பி.செல் வம், மாவட்டச் செயலாளர் எஸ். குமார், பொருளாளர் பி.மீனாட்சி சுந்தரம் சிஐடியு மாவட்ட நிர்வாகி கள் இரா.லெனின், ப. பழனியம் மாள் மற்றும் விக்னேஷ், திரவி யம், சுப்பிரமணி, தங்கமணி ஆகி யோர் மனு அளித்தனர். முன்னதாக செய்தியாளர்களி டம் பேசிய சங்கத் தலைவர் செல் வம், “மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் சுமார் 105 முடி திருத்தும் தொழிலாளர் குடும்பத்தினர் வசித்து வருகிறோம் சமூக ரீதி யாக பின்தங்கிய தொழில் செய்து வரும் எங்களுக்கு குறைந்த பட்ச வருமானமே கிடைக்கிறது. அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டுமென்றார்”. ஊக்கத்தொகை கேட்டுமனு சாத்தூர் அருகே உள்ள இருக் கன்குடி மாரியம்மன் கோவிலில் முடியிறக்கும் தொழில் செய்து வருவோர் தங்களுக்கு தமிழக  அரசு அறிவித்த ஊக்கத் தொகை யை உடனடியாக வழங்க வேண் டுமென மாவட்ட ஆட்சியர் ஜெ. மேகநாதரெட்டியிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவில் கூறியிருப்பதாவது: சாத்தூர் அருகே உள்ளது இருக் கன்குடி மாரியம்மன் கோவில். இங்கு முடியிறக்கும் பணியாளர் சங்கத்தில் 70 பேர் உள்ளோம். 30 பேர் பதிவு பெறாமல் உள்ள னர். இந்நிலையில் தமிழக அரசு, முடியிறக்கும் தொழிலாளர் களுக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத் தொகை அறிவித்தது. இதில் சில ருக்கு மட்டுமே இத்தொகை கிடைத்துள்ளது. எனவே, அனை வருக்கும் ஊக்கத் தொகை கிடைத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பணித் தொகையாக சீட்டு ஒன்றுக்கு ரூ. 30 கிடைக்க ஏற்பாடு செய்ய வேண் டும் என கூறியுள்ளனர்.