districts

img

5 நாள் வேலை கோரி வங்கி ஊழியர்கள் போராட்டம்

விருதுநகர், ஜன.25- வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஓய்வூதியத்தை தற்போதைய சம்பளத்தின்படி உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் விருதுநகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் ஸ்டேட் வங்கி முன்பு நடைபெற்ற இப்போராட்டத்திற்கு பரிவரதராஜன் தலைமையேற்றார். கோரிக்கைகளை விளக்கி பிஇஎப்ஐ மாவட்ட ஆலோசகர் மாரிக்கனி பேசினார். இதில் ஏராளமான வங்கி ஊழியர்கள் பங்கேற்றனர்.