districts

img

வாழைக்கன்று நட்டு சாலைப் பணியாளர்கள் போராட்டம்

சிவகங்கை,ஏப்.8-  சாலைப்பணியாளர்களின் 41 மாத பணிநீக்கக் காலத்தை பணிக்காலமாக முறைப் படுத்தி ஆணை வழங்க வேண்டும். சாலை பராமரிப்பு பணிகளை அனைத்தும் அரசே ஏற்று நடத்த வேண்டும். கிராமப்புற இளைஞர்களுக்கு சாலைப்பணியாளர் பணி வழங்க வேண்டும்  என்பன  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் சிவகங்கையில் வாழைக் கன்று நட்டு சாலைப்பணியாளர்கள்  சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவகங்கை நெடுஞ் சாலைத்துறை கோட்ட அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு  மாவட்ட தலைவர் மாரி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சின்னப்பன்,மாவட்ட பொரு ளாளர் முத்தையா  மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பேசி னர். மாநிலச் செயற்குழு உறுப்பினர் சிவக்குமார் நிறைவுரையாற்றினார்.  மதுரை  மதுரையில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கம் சார்பில் அழகர்கோவில் சாலை தாமரை தொட்டி அருகில் உள்ள கோட்டப் பொறியாளர் அலுவலகத்தில் மதுரை மாவட்டத்  தலைவர் த.மனோகரன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.   மாவட்டச்செயலாளர் வே.சோலையப்பன் துவக்கி வைத்து பேசினார். இணைச் செயலாளர்கள் வீ.மணிமாறன், பி.பால்ராஜ், ப.சந்திரசேகர் ஆகியோர் விளக்கிப் பேசினர். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் க.நீதிராஜா ஆதரித்துப் பேசினார். மாநிலப் பொருளாளர் இரா.தமிழ் நிறைவுரையாற்றினர். மாவட்டப் பொருளாளர் நா.முருகன் நன்றி கூறினார்.