சென்னை, ஜன. 21- இம் மாதம் 30 ஆம் தேதி வெளி வர உள்ள “நான் ஏன் காந்தியைக் கொன்றேன்?” திரைப்படத்திற்கு ஒன்றிய, மாநில அரசுகள் தடை விதிக்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வலியுறுத்தி யுள்ளார். இது தொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு:- ‘‘நான் ஏன் காந்தியைக் கொன்றேன்?’’இப்படியொரு திரைப்படம் தயாராகி, வரும் 2022 ஜனவரி 30 ஆம் தேதி வெளியிட இருப்பதாகச் செய்திகள் வந்துள்ளன. நாத்ராம் கோட்சே நீதி மன்றத்தில் கூறி, தான் செய்த படுபாதக பாவத்திற்கு நியாயம் கற்பித்ததைத் தலைப்பாகக் கொண்டு திரைப்படம் தயாரிக் கப்பட்டு அது வெளிவர இருக்கி றது! இதுவும் மோடி சர்க்காரின் சாதனையாகக்கூட விளம்பரம் செய்யக்கூடும்! இதிலே மிகப் பெரும் வேதனை என்னவெனில் ‘நான் ஏன் காந்தியைக் கொன்றேன்!’ என்ற திரைப்படத்தில் கோட்ஸே பாத்திரத்தில் நடித்திருப்பது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். அவர் பெயர் ‘அமோல் கோல்ஹே’. எனவே, இந்த திரைப்படம் உலகில் எங்கும் வெளிவரக் கூடாது. காந்தியை கொன்றி ருக்கலாம். ஆனால், காந்தி யத்தை யாரும் கொல்ல முடி யாது! காந்தியம் அவர் போதித்த சாத்வீகம், சத்தியம், சத்தியாகிரகம், சமய நல்லி ணக்கம் நாட்டில் என்றும் இருக்கி றது என்பது உண்மையானால் தேசப் பிதா பற்றிய திரைப்படம் வெளிவரக் கூடாது. ஒன்றிய அரசும், ஒவ்வொரு அரசும் இந்தத் திரைப்படத்திற்குத் தடைவிதிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.