யா.ஒத்தக்கடை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அய்யணன் அம்பலம் அவர்களின் 100-ஆவது பிறந்தநாள் விழா, 25-ஆம் ஆண்டு குருபூஜை யா.ஒத்தக்கடை அருகே உள்ள ராஜகம்பீரத்தில் அமைந்துள்ள அவரது மணி மண்படத்தில் நடைபெற்றது. மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், அமைச்சர் பி.மூர்த்தி, மதுரை துணை மேயர் டி.நாகராஜன், சிபிஎம் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.மாயாண்டி, கிழக்கு தாலூகாச் செயலாளர் எம்.கலைச்செல்வன், ஒத்தக்கடை ஊராட்சிமன்றத் தலைவர் முருகேஸ்வரி சரவணன், நரசிங்கம் ஊராட்சி மன்றத் தலைவர் ஆனந்த் மற்றும் தாலுகா குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.