சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பேரூராட்சியில் வியாழனன்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையேற்று பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்து இப்பேரணியில் கலந்து கொண்டார். தொண்டி பேரூராட்சி தலைவர் திருமதி. ஷாஜகான்பானு அவர்கள், திருவாடனை வட்டாட்சியர் செந்தில்வேல்முருகன் அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.