districts

img

விழிப்புணர்வு பேரணி

பழனி, மார்ச்.25- பழனி பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் ‘‘நெகிழியை  ஒழிப்போம், மண்வளம் காப்போம்’’ என்ற விழிப்பு ணர்வு பேரணி நெய்க்காரப்பட்டி, வேலூர் மண்டு காளியம்மன் கோவிலில் இருந்து நடைபெற்றது.  நிகழ்விற்கு பழனி அரசு சித்த மருத்துவர் மகேந்தி ரன் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணி திட்ட அலு வலர் முனைவர் சத்யா, முனைவர் சுமித்ரா தேவி, பவதாரணி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரி மாணவிகள் பங்கேற்று மக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரம் மற்றும் மஞ்சள் பைகளை இலவசமாக வழங்கினர்.