districts

img

அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் பேராசிரியருக்கு விருது

விருதுநகர், நவ.10 - சிதம்பரம் அண்ணாமலைப் பல்க லைக்கழகத்தின் வேளாண் விரிவாக் கத்துறை பேராசியர் முனைவர் தி,ராஜ்பிர வீனுக்கு சிறந்த ஆய்வுக் கட்டுரைக்கான சிறந்த விருது வழங்கப்பட்டது,  விருதுநகரில் உள்ள செந்திக்குமார நாடார் கல்லுரியில் இந்திய சமூக அறி வியல் கழக நிதி உதவியுடன் இரண்டு  நாள் தேசியக் கருத்தரங்கம் நடைபெற் றது. அதில். “கிராமப்புற மகளிருக்கு அதி காரம் அளித்தலில் உள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகள் ” எனும் தலைப்பில் பல்வேறு  கட்டுரைகள் இடம் பெற்றன. அதில். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் விரி வாக்க இணைப் பேராசிரியயர் தி,ராஜ்பிர வீன் எழுதிய ”வேளாண் புதுமைகள் வாயி லாக கிராமப்புற மகளிருக்கு அதிகாரம ளித்தலில் உள்ள சவால்கள் மற்றும் வாய்ப்பு கள்’’ சிறந்த கட்டுரையாக  தேர்வு செய்யப்பட்டது.  பின்பு. முனைவர் தி,ராஜ்பிரவீனுக்கு விருது வழங்கப்பட்டது, முன்னதாக நடை பெற்ற போட்டியில் ஏராளமான கல்லுரி பேராசிரியர்கள் மற்றும் ஆய்வு மாண வர்கள் கலந்து கொண்டனர்.